Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans

அஸ்ஸுமர்

Die Ziele der Surah:
الدعوة للتوحيد والإخلاص، ونبذ الشرك.
ஏகத்துவம், மனத்தூய்மை, இணைவைப்பை விட்டுவிடுதல் என்பவற்றின் பக்கம் அழைப்பு விடுத்தல் info

external-link copy
1 : 39

تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟

39.1. இந்த குர்ஆன் யாவற்றையும் மிகைத்த யாராலும் மிகைக்க முடியாத, படைத்தல், திட்டமிடல், தனது மார்க்கம் ஆகியவற்றில் ஞானம் நிறைந்த அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதாகும். அது வேறொருவரிடமிருந்து இறக்கப்பட்டதல்ல. info
التفاسير:

external-link copy
2 : 39

اِنَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ فَاعْبُدِ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّیْنَ ۟ؕ

39.2. -தூதரே!- நிச்சயமாக நாம் உம்மீது சத்தியத்தை உள்ளடக்கியுள்ள குர்ஆனை இறக்கியுள்ளோம். அதன் செய்திகள் முழுவதும் உண்மையானவை. அதன் சட்டங்கள் முழுவதும் நீதியானவை. இணைவைப்பிலிருந்து நீங்கியவராக அந்தரங்க சுத்தியோடு அல்லாஹ் ஒருவனையே வணங்குவீராக. info
التفاسير:

external-link copy
3 : 39

اَلَا لِلّٰهِ الدِّیْنُ الْخَالِصُ ؕ— وَالَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ ۘ— مَا نَعْبُدُهُمْ اِلَّا لِیُقَرِّبُوْنَاۤ اِلَی اللّٰهِ زُلْفٰی ؕ— اِنَّ اللّٰهَ یَحْكُمُ بَیْنَهُمْ فِیْ مَا هُمْ فِیْهِ یَخْتَلِفُوْنَ ؕ۬— اِنَّ اللّٰهَ لَا یَهْدِیْ مَنْ هُوَ كٰذِبٌ كَفَّارٌ ۟

39.3. இணைவைப்பை விட்டும் நீங்கிய தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வை விடுத்து சிலைகளையும் ஷைத்தான்களையும் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டு அவர்களை வணங்குவோர், தாம் அவர்களை வணங்குவதை நியாயப்படுத்த இவ்வாறு கூறுகிறார்கள்: “அந்தஸ்த்தால் எங்களை அல்லாஹ்விடம் நெருக்கிவைக்க வேண்டும், எங்களின் தேவைகளை அவனிடம் கொண்டுசெல்ல வேண்டும், அவனிடம் எங்களுக்காக பரிந்துபேச வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இவர்களை வணங்குகின்றோம்.” நிச்சயமாக அல்லாஹ் அவனை மட்டுமே வணங்கும் நம்பிக்கையாளர்களுக்கும் அவனை நிராகரிக்கும் இணைவைப்பாளர்களுக்குமிடையே அவர்கள் முரண்பட்டுள்ள ஏகத்துவத்தின் விடயத்தில் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். அல்லாஹ்வுக்கு இணையிருப்பதாக அவன் மீது பொய் கூறுவோருக்கும் அல்லாஹ் அவர்கள் மீது அருட்கொடைகளை மறுப்போருக்கும் அவன் சத்தியத்தின்பால் வழிகாட்ட அருள்புரிய மாட்டான். info
التفاسير:

external-link copy
4 : 39

لَوْ اَرَادَ اللّٰهُ اَنْ یَّتَّخِذَ وَلَدًا لَّاصْطَفٰی مِمَّا یَخْلُقُ مَا یَشَآءُ ۙ— سُبْحٰنَهٗ ؕ— هُوَ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ ۟

39.4. அல்லாஹ் ஒரு மகனை ஏற்படுத்த நாடியிருந்தால் தன் படைப்புகளில் தான் நாடியோரைத் தேர்ந்தெடுத்து அவனைத் தனது பிள்ளையின் அந்தஸ்த்தில் வைத்திருப்பான். இணைவைப்பாளர்களின் கூறுவதைவிட்டும் அவன் தூய்மையானவன். தன் உள்ளமையிலும் பண்புகளிலும் செயல்களிலும் தனித்தவன். அவற்றில் அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவன் படைப்புகள் அனைத்தையும் அடக்கியாள்பவன். info
التفاسير:

external-link copy
5 : 39

خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ ۚ— یُكَوِّرُ الَّیْلَ عَلَی النَّهَارِ وَیُكَوِّرُ النَّهَارَ عَلَی الَّیْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ؕ— كُلٌّ یَّجْرِیْ لِاَجَلٍ مُّسَمًّی ؕ— اَلَا هُوَ الْعَزِیْزُ الْغَفَّارُ ۟

39.5. அவன் வானங்களையும் பூமியையும் பாரிய நோக்கத்தோடு படைத்துள்ளான். அநியாயக்காரர்கள் கூறுவதுபோல அவன் வீணாகப் படைக்கவில்லை. அவன் இரவை பகலில் பிரவேசிக்கச் செய்கின்றான். பகலை இரவில் பிரவேசிக்கச் செய்கின்றான். ஒன்று வெளிப்பட்டால் மற்றொன்று மறைந்து விடுகிறது. அவன் சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தித் தந்துள்ளான். ஒவ்வொன்றும் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம்வரை இந்த வாழ்க்கை முடியும்வரை சென்று கொண்டிருக்கும். அவன்தான் தன் எதிரிகளைத் தண்டிக்கக்கூடிய அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவன். info
التفاسير:
Die Nutzen der Versen in dieser Seite:
• الداعي إلى الله يحتسب الأجر من عنده، لا يريد من الناس أجرًا على ما يدعوهم إليه من الحق.
1. அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் அழைப்பாளர் அல்லாஹ்விடமே கூலியை எதிர்பார்க்கிறார். சத்தியத்தின் பக்கம் அழைப்பதற்கு அவர் மக்களிடம் கூலியை எதிர்பார்க்கமாட்டார். info

• التكلّف ليس من الدِّين.
2. வலிந்து செயற்படுவது மார்க்கத்தில் உள்ளதல்ல. info

• التوسل إلى الله يكون بأسمائه وصفاته وبالإيمان وبالعمل الصالح لا غير.
3. அல்லாஹ்வின் பண்புகள், பெயர்கள் மற்றும் நற்செயல்களைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்கலாம். ஏனையவற்றைக் கொண்டல்ல. info