Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans

external-link copy
49 : 3

وَرَسُوْلًا اِلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۙ۬— اَنِّیْ قَدْ جِئْتُكُمْ بِاٰیَةٍ مِّنْ رَّبِّكُمْ ۙۚ— اَنِّیْۤ اَخْلُقُ لَكُمْ مِّنَ الطِّیْنِ كَهَیْـَٔةِ الطَّیْرِ فَاَنْفُخُ فِیْهِ فَیَكُوْنُ طَیْرًا بِاِذْنِ اللّٰهِ ۚ— وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْیِ الْمَوْتٰی بِاِذْنِ اللّٰهِ ۚ— وَاُنَبِّئُكُمْ بِمَا تَاْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَ ۙ— فِیْ بُیُوْتِكُمْ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ

3.49. அவரை இஸ்ராயீலின் மக்களுக்கு தூதராகவும் ஆக்குவான். அவர் அவர்களிடம் கூறுவார்: “நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். என் தூதுத்துவத்தை உண்மை என நிருபிக்கக்கூடிய சான்றுகளையும் நான் உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். அவை, நான் களிமண்ணிலிருந்து பறவையின் வடிவத்தைப் போல் உண்டாக்குவேன். நான் அதில் ஊதியதும் அது அல்லாஹ்வின் அனுமதியால் உயிருள்ள பறவையாகிவிடும். பிறவிக்குருடனைக் குணமாக்குவேன், அவன் பார்வைபெற்றுவிடுவான். தொழுநோயாளியையும் நான் குணப்படுத்துவேன். அவரது தோல் ஆரோக்கியம் பெற்றுவிடும். மரணித்தவர்களை உயிர்த்தெழச் செய்வேன். இவையனைத்தும் அல்லாஹ்வின் அனுமதிகொண்டே நடக்கும். நீங்கள் உண்ணும் உணவையும், வீட்டில் மறைத்துவைத்த உணவுப்பொருளையும் பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பேன். நான் குறிப்பிட்டவைகள் மனிதர்களால் செய்ய முடியாத பெரும் காரியங்களாகும். நீங்கள் ஈமானை விரும்பக்கூடியவர்களாக இருந்தால், சான்றுகளை உண்மைப்படுத்தக்கூடியவர்களாக இருந்தால் இவையனைத்தும் நான் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் என்பதற்கான தெளிவான சான்றுகளாகும். info
التفاسير:
Die Nutzen der Versen in dieser Seite:
• شرف الكتابة والخط وعلو منزلتهما، حيث بدأ الله تعالى بذكرهما قبل غيرهما.
1. எழுத்தறிவு சிறப்புக்குரியதாகும். அதனால்தான் அல்லாஹ் ஏனைய பாக்கியங்களைக் குறிப்பிட முன் அதனைக் குறிப்பிட்டுள்ளான். info

• من سنن الله تعالى أن يؤيد رسله بالآيات الدالة على صدقهم، مما لا يقدر عليه البشر.
2. அல்லாஹ் தன் தூதர்களுக்கு, அவர்களின் தூதுத்துவத்தை உண்மை என அறிவிக்கக்கூடிய மனிதனால் நிகழ்த்த முடியாத அற்புதங்களை அளித்து உதவிசெய்வது அவனது வழிமுறையாகும். info

• جاء عيسى بالتخفيف على بني إسرائيل فيما شُدِّد عليهم في بعض شرائع التوراة، وفي هذا دلالة على وقوع النسخ بين الشرائع.
3. தவ்ராத்தின் சில சட்டதிட்டங்களில் இருந்த கடினத்தை பனூ இஸ்ரவேலர்களின் மீது இலகுபடுத்தும் சட்டங்களை ஈஸா (அலை) அவர்கள் கொண்டுவந்தார்கள். மார்க்கங்களுக்கிடையில் சட்டங்களில் மாற்றம் ஏற்படும் என்பதற்கு இது ஒரு சான்றாகும். info