Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana

external-link copy
138 : 6

وَقَالُوْا هٰذِهٖۤ اَنْعَامٌ وَّحَرْثٌ حِجْرٌ ۖۗ— لَّا یَطْعَمُهَاۤ اِلَّا مَنْ نَّشَآءُ بِزَعْمِهِمْ وَاَنْعَامٌ حُرِّمَتْ ظُهُوْرُهَا وَاَنْعَامٌ لَّا یَذْكُرُوْنَ اسْمَ اللّٰهِ عَلَیْهَا افْتِرَآءً عَلَیْهِ ؕ— سَیَجْزِیْهِمْ بِمَا كَانُوْا یَفْتَرُوْنَ ۟

6.138. “இந்த கால்நடைகளும் பல வகையான பயிர்களும் தடுக்கப்பட்டவையாகும். சிலைகளின் சேவகர்கள் போன்ற தாம் விரும்பியவர்களைத் தவிர வேறு யாரும் இவற்றை உண்ணக்கூடாது; இந்த கால்நடைகளின் முதுகுகள் தடை செய்யப்பட்டவையாகும். இவற்றின் மீது பயணம் செய்யவோ சுமைகளை ஏற்றவோ கூடாது; (அல்பஹீரா: காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்,அஸ்ஸாஇபா: சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்டு மேய விடப்பட்ட பெண் ஒட்டகம், அல்ஹாமி: அதிகமான பெண் ஒட்டகங்களை கருவுறச் செய்த ஆண் ஒட்டகம்) இந்த கால்நடைகளை அறுக்கும் போது அல்லாஹ்வின் பெயர் கூறக் கூடாது. சிலைகளின் பெயர்களைத்தான் கூற வேண்டும்” என்று இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள். இவைகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த சட்டம் என அல்லாஹ்வின் மீது பொய் கூறியே இவற்றைச் செய்தனர். அல்லாஹ்வின் மீது அவர்கள் இட்டுக் கட்டிக் கொண்டிருந்ததன் காரணமாக விரைவில் அவன் அவர்களுக்குத் தண்டனை வழங்குவான். info
التفاسير:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• ذم الله المشركين بسبع صفات هي : الخسران والسفاهة وعدم العلم وتحريم ما رزقهم الله والافتراء على الله والضلال وعدم الاهتداء؛ فهذه أمور سبعة، وكل واحد منها سبب تام في حصول الذم.
2. இணைவைப்பாளர்களை அல்லாஹ் ஏழு பண்புகளைக் கொண்டு இழித்துரைத்துள்ளான். அவை: இழப்பு, மடமைத்தனம், அறிவின்மை, அல்லாஹ் வழங்கியதை தடை செய்துகொள்ளல், அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுதல், வழிகேடு, நேர்வழியடையாமை. இவ்வேழு காரியங்களில் ஒவ்வொன்றும் இழிவுக்கான தனிக் காரணமாகும். info

• الأهواء سبب تحريم ما أحل الله وتحليل ما حرم الله.
1. மனஇச்சையே அல்லாஹ் அனுமதித்ததை தடைசெய்வதற்கும் அவன் தடைசெய்ததை அனுமதிப்பதற்கும் காரணமாக இருக்கின்றது. info

• وجوب الزكاة في الزروع والثمار عند حصادها، مع جواز الأكل منها قبل إخراج زكاتها، ولا يُحْسَب من الزكاة.
2. பயிர்களையும் பழங்களையும் அறுவடை செய்யும் போது அவற்றிற்குரிய ஸகாத் வழங்குவது கடமையாகும். ஸகாத் வழங்கப்படும் முன்னரே அவற்றிலிருந்து உண்ணலாம். அது ஸகாத்தில் சேராது. info

• التمتع بالطيبات مع عدم الإسراف ومجاوزة الحد في الأكل والإنفاق.
3. உண்பதிலும் செலவு செய்வதிலும் வரம்புமீறாது, வீண்விரயம் செய்யாமல் நல்லவற்றை அனுபவிக்கலாம். info