Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana

external-link copy
21 : 34

وَمَا كَانَ لَهٗ عَلَیْهِمْ مِّنْ سُلْطٰنٍ اِلَّا لِنَعْلَمَ مَنْ یُّؤْمِنُ بِالْاٰخِرَةِ مِمَّنْ هُوَ مِنْهَا فِیْ شَكٍّ ؕ— وَرَبُّكَ عَلٰی كُلِّ شَیْءٍ حَفِیْظٌ ۟۠

34.21. அவர்களை வழிகேட்டில் நிர்ப்பந்திக்கும் அளவுக்கு இப்லீஸ் அவர்கள் மீது ஆதிக்கம் பெற்றிருக்கவில்லை. நிச்சயமாக அவனால் முடிந்ததெல்லாம் அலங்கரித்துக் காட்டுவதும் வழிகெடுப்பதும்தான். அவர்களை வழிகெடுக்க அவனுக்கு நாம் அனுமதியளித்தாலே தவிர. மறுமை மற்றும் அதில் கூலி வழங்கல் என்பவற்றை உண்மையாகவே நம்பிக்கைகொண்டவர்கள் யார்? அதில் சந்தேகிப்பவர்கள் யார்? என்ற விடயம் வெளிவருவதற்காக இவ்வாறு நாம் அனுமதிக்கின்றோம். -தூதரே!- உம் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். அவன் அடியார்களின் செயல்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவற்றிற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குகிறான்.
info
التفاسير:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• الشكر يحفظ النعم، والجحود يسبب سلبها.
1. நன்றி செலுத்துவது அருட்கொடைகளைப் பாதுகாக்கும். நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்வது அருட்கொடைகள் பறிக்கப்படக் காரணமாக அமையும். info

• الأمن من أعظم النعم التي يمتنّ الله بها على العباد.
2. அல்லாஹ் அடியார்களுக்கு அளிக்கும் மிகப் பெரும் அருட்கொடைகளில் அமைதியும் ஒன்றாகும். info

• الإيمان الصحيح يعصم من اتباع إغواء الشيطان بإذن الله.
3. சரியான ஈமான் அல்லாஹ்வின் உதவியுடன் ஷைத்தானின் வழிகேட்டைப் பின்பற்றுவதிலிருந்து பாதுகாக்கிறது. info

• ظهور إبطال أسباب الشرك ومداخله كالزعم بأن للأصنام مُلْكًا أو مشاركة لله، أو إعانة أو شفاعة عند الله.
4. சிலைகளுக்கு உரிமையுள்ளது அல்லது அவைகளுக்கு அல்லாஹ்வுடன் பங்குண்டு அல்லது அவனுக்கு உதவி செய்கின்றன, அல்லது அவனிடம் பரிந்துரை செய்யலாம் என்ற எண்ணங்கள் போன்ற இணைவைப்பின் காரணிகள் மற்றும் வாயில்கள் அனைத்தும் தவறானவை என தெளிவாகியுள்ளது. info