Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana

external-link copy
22 : 31

وَمَنْ یُّسْلِمْ وَجْهَهٗۤ اِلَی اللّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰی ؕ— وَاِلَی اللّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ ۟

31.22. யார் அல்லாஹ்வுக்கு மட்டுமே வணக்க வழிபாட்டை உரித்தாக்கி அமல்களை நல்ல முறையில் செய்து அவன்பால் முன்னோக்கினாரோ அவர், தப்ப விரும்பும் ஒருவர் பற்றிப்பிடிக்கும் உறுதியான கயிற்றை பலமாகப் பற்றிக்கொண்டார். ஏனெனில் அது அறுபட்டு விடுமோ என அஞ்சவேண்டியதில்லை எனும் அளவுக்கு உறுதியானதாகும். விவகாரங்கள் அனைத்தின் முடிவும் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. எனவே அவன் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்கிடுவான். info
التفاسير:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• نعم الله وسيلة لشكره والإيمان به، لا وسيلة للكفر به.
1. அல்லாஹ்வின் அருட்கொடைகள் நன்றி செலுத்துவதற்கும் நம்பிக்கைகொள்வதற்கும் காரணமாக அமைய வேண்டுமே அன்றி அவனை நிராகரிப்பதற்கு காரணமாக அமைந்துவிடக் கூடாது. info

• خطر التقليد الأعمى، وخاصة في أمور الاعتقاد.
2. குருட்டுத்தனமாக பின்பற்றுவதன் தீய விளைவு தெளிவாகிறது. குறிப்பாக நம்பிக்கை விடயத்தில். info

• أهمية الاستسلام لله والانقياد له وإحسان العمل من أجل مرضاته.
3. அல்லாஹ்வுக்கு அடிபணிவது மற்றும் அவனுடைய திருப்திக்காக நற்செயல்கள் புரிவதன் அவசியம் தெளிவாகிறது. info

• عدم تناهي كلمات الله.
4. அல்லாஹ்வின் வார்த்தைகள் என்றும் முடிவடையாதவை. info