Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana

external-link copy
24 : 21

اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً ؕ— قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ ۚ— هٰذَا ذِكْرُ مَنْ مَّعِیَ وَذِكْرُ مَنْ قَبْلِیْ ؕ— بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۙ— الْحَقَّ فَهُمْ مُّعْرِضُوْنَ ۟

21.24. மாறாக அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அவை வணக்கத்திற்கு தகுதியானவை என்பதற்கான ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள். என்மீது இறக்கப்பட்ட இந்த வேதத்திலும் முந்தைய தூதர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களிலும் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக பெரும்பான்மையான இணைவைப்பாளர்கள் அறியாமையையும், குருட்டுத்தனமாக பின்பற்றுவதையுமே ஆதாரமாகக் கொண்டுள்ளார்கள். அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதை விட்டும் புறக்கணிக்கிறார்கள். info
التفاسير:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• الظلم سبب في الهلاك على مستوى الأفراد والجماعات.
1. தனிமனிதர்களானாலும், சமூகங்களானாலும் அநியாயம் இழைப்பது அழிவிற்குக் காரணமாக அமைகிறது. info

• ما خلق الله شيئًا عبثًا؛ لأنه سبحانه مُنَزَّه عن العبث.
2. அல்லாஹ் எந்த ஒன்றையும் வீணாகப் படைக்கவில்லை. நிச்சயமாக அவன் வீணாகப் படைப்பதைவிட்டும் தூய்மையானவன். info

• غلبة الحق، ودحر الباطل سُنَّة إلهية.
3. சத்தியம் வெற்றி பெறுவதும் அசத்தியத்தை அழிப்பதும் இறை நியதியாகும். info

• إبطال عقيدة الشرك بدليل التَّمَانُع.
4. “பல தெய்வங்களை வணக்கத்திற்குரியவையாக இருந்தால் வானமும் பூமியும் சிரழிந்துவிடும்” என்ற ஆதாரத்தினடிப்படையில் இணைவைப்புக்கொள்கை தவறென நிரூபிக்கப்பட்டுள்ளது. info