Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana

external-link copy
7 : 1

صِرَاطَ الَّذِیْنَ اَنْعَمْتَ عَلَیْهِمْ ۙ۬— غَیْرِ الْمَغْضُوْبِ عَلَیْهِمْ وَلَا الضَّآلِّیْنَ ۟۠

1.7 அந்த நேர்வழி உன் அடியார்களில் நீ வழிகாட்டி அருள்புரிந்த நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், நல்லவர்கள் ஆகியோர் சென்ற வழி. அவர்களே சிறந்த தோழர்கள். சத்தியத்தை அறிந்து அதனைப் பின்பற்றாமல் உன்னுடைய கோபத்திற்கு ஆளான யூதர்களின் வழி அல்ல அது; சத்தியத்தை தேடுவதிலும் அதனை அடைவதிலும் அலட்சியமாக இருந்ததால் அதனை விட்டு வழிதவறிய கிறித்தவர்களின் வழியுமல்ல அது. info
التفاسير:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• افتتح الله تعالى كتابه بالبسملة؛ ليرشد عباده أن يبدؤوا أعمالهم وأقوالهم بها طلبًا لعونه وتوفيقه.
1. அடியார்கள் தங்களின் செயல்களையும் பேச்சுகளையும் அல்லாஹ்வின் பெயர் கூறி அவனிடம் உதவிதேடிய நிலையில் தொடங்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுப்பதற்காகவே அவன் தனது வேதத்தை"பிஸ்மில்லாஹ்"என்று தொடங்குகிறான். info

• من هدي عباد الله الصالحين في الدعاء البدء بتمجيد الله والثناء عليه سبحانه، ثم الشروع في الطلب.
2. பிரார்த்தனையில் முதன்மையாக அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்த பிறகு தம் வேண்டுதலை முன்வைப்பது அல்லாஹ்வுடைய நல்லடியார்களின் வழிமுறையாகும். info

• تحذير المسلمين من التقصير في طلب الحق كالنصارى الضالين، أو عدم العمل بالحق الذي عرفوه كاليهود المغضوب عليهم.
3. கிறித்தவர்களைப் போன்று சத்தியத்தைத் தேடுவதில் அலட்சியமாக இருந்து வழிகெட்டுப்போவதோ, அல்லது யூதர்களைப் போன்று அறிந்துகொண்ட சத்தியத்தைப் பின்பற்றாமல் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகுவதோ கூடாது என்று முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது. info

• دلَّت السورة على أن كمال الإيمان يكون بإخلاص العبادة لله تعالى وطلب العون منه وحده دون سواه.
4. வணக்க வழிபாட்டை மனத்தூய்மையோடு அல்லாஹ்வுக்கு மட்டுமே அர்ப்பணித்தல், வேறு யாரிடமும் இல்லாமல் அவனிடம் மட்டுமே உதவிதேடுதல் ஆகியவை மூலமே ஈமான் பரிபூரணமடைகிறது என்பதையும் இந்த அத்தியாயம் உணர்த்துகிறது. info