(உமது அமல்களை) நீர் பெரிதாக கருதியவராக, (உமது இறைவனுக்கு முன்னால் உமது அமல்களை) சொல்லிக் காண்பிக்காதீர்!
التفاسير:
7:74
وَلِرَبِّكَ فَاصْبِرْ ۟ؕ
இன்னும், உமது இறைவனுக்காக நீர் பொறுமையாக இருப்பீராக!
التفاسير:
8:74
فَاِذَا نُقِرَ فِی النَّاقُوْرِ ۟ۙ
ஆக, எக்காளத்தில் ஊதப்பட்டால்,
التفاسير:
9:74
فَذٰلِكَ یَوْمَىِٕذٍ یَّوْمٌ عَسِیْرٌ ۟ۙ
அதுதான் அந்நாளில் மிக சிரமமான ஒரு நாள் ஆகும்.
التفاسير:
10:74
عَلَی الْكٰفِرِیْنَ غَیْرُ یَسِیْرٍ ۟
அது, நிராகரிப்பாளர்களுக்கு இலகுவானதல்ல.
التفاسير:
11:74
ذَرْنِیْ وَمَنْ خَلَقْتُ وَحِیْدًا ۟ۙ
என்னையும் நான் எவனை தனியாக (-அவனுக்கு எவ்வித செல்வமும் சந்ததியும் இல்லாதவனாக அவனது தாய் வயிற்றிலிருந்து வெளியேறும்போது) படைத்தேனோ அவனையும் விட்டுவிடுவீராக!
التفاسير:
12:74
وَّجَعَلْتُ لَهٗ مَالًا مَّمْدُوْدًا ۟ۙ
இன்னும், (அவன் பிறந்து ஆளான பிறகு) அவனுக்கு நான் விசாலமான செல்வத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன்.
التفاسير:
13:74
وَّبَنِیْنَ شُهُوْدًا ۟ۙ
இன்னும், (அவனுடன் எப்போதும்) ஆஜராகி இருக்கக்கூடிய ஆண் பிள்ளைகளை (நான் அவனுக்கு கொடுத்தேன்).
التفاسير:
14:74
وَّمَهَّدْتُّ لَهٗ تَمْهِیْدًا ۟ۙ
இன்னும், அவனுக்கு அதிகமான வசதிகளை செய்து கொடுத்தேன்.
التفاسير:
15:74
ثُمَّ یَطْمَعُ اَنْ اَزِیْدَ ۟ۙ
பிறகு, (அவனுக்கு இன்னும் பல வசதிகளை) நான் அதிகப்படுத்த வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.
التفاسير:
16:74
كَلَّا ؕ— اِنَّهٗ كَانَ لِاٰیٰتِنَا عَنِیْدًا ۟ؕ
அவ்வாறல்ல. நிச்சயமாக அவன் நமது வசனங்களுக்கு முரண்படக் கூடியவனாக (அவற்றை மறுப்பவனாக, அவற்றை மீறுபவனாக, நிராகரிப்பதில் பிடிவாதம் பிடித்தவனாக) இருந்தான்.
التفاسير:
17:74
سَاُرْهِقُهٗ صَعُوْدًا ۟ؕ
விரைவில் அவனை மிகப் பெரிய சிரமத்திற்கு நான் நிர்ப்பந்தித்து விடுவேன்.
التفاسير:
18:74
اِنَّهٗ فَكَّرَ وَقَدَّرَ ۟ۙ
நிச்சயமாக அவன் யோசித்தான். இன்னும், திட்டமிட்டான்.
التفاسير:
19:74
فَقُتِلَ كَیْفَ قَدَّرَ ۟ۙ
ஆக, அவன் எப்படி திட்டமிட்டாலும் அவன் அழியட்டும்.
التفاسير:
20:74
ثُمَّ قُتِلَ كَیْفَ قَدَّرَ ۟ۙ
பிறகு, அவன் எப்படி திட்டமிட்டாலும் அவன் அழியட்டும்.
التفاسير:
21:74
ثُمَّ نَظَرَ ۟ۙ
பிறகு, அவன் தாமதித்தான்.
التفاسير:
22:74
ثُمَّ عَبَسَ وَبَسَرَ ۟ۙ
பிறகு, முகம் சுளித்தான். இன்னும், கடுகடுத்தான்.
التفاسير:
23:74
ثُمَّ اَدْبَرَ وَاسْتَكْبَرَ ۟ۙ
பிறகு, அவன் புறக்கணித்தான். இன்னும், பெருமையடித்தான்.
التفاسير:
24:74
فَقَالَ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ یُّؤْثَرُ ۟ۙ
ஆக, அவன் கூறினான்: இது, (சூனியக்காரர்களிடமிருந்து) கற்றுக்கொள்ளப்பட்ட சூனியமாகவே தவிர இல்லை.
التفاسير:
25:74
اِنْ هٰذَاۤ اِلَّا قَوْلُ الْبَشَرِ ۟ؕ
இது மனிதர்களின் சொல்லாகவே தவிர இல்லை.
التفاسير:
26:74
سَاُصْلِیْهِ سَقَرَ ۟
“சகர்” நரகத்தில் அவனை நான் விரைவில் பொசுக்குவேன்.
التفاسير:
27:74
وَمَاۤ اَدْرٰىكَ مَا سَقَرُ ۟ؕ
“சகர்” என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா?
التفاسير:
28:74
لَا تُبْقِیْ وَلَا تَذَرُ ۟ۚ
அது (தன்னில் யாரையும்) வாழ வைக்காது! இன்னும், (செத்து அழிந்து விடுவதற்கு யாரையும்) விட்டுவிடாது.
التفاسير:
29:74
لَوَّاحَةٌ لِّلْبَشَرِ ۟ۚ
அது தோல்களை எரித்துவிடும்.
التفاسير:
30:74
عَلَیْهَا تِسْعَةَ عَشَرَ ۟ؕ
அதன் மீது பத்தொன்பது வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள்.
நரகத்தின் காவலாளிகளை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. நிராகரித்தவர்களுக்கு ஒரு குழப்பமாகவே தவிர அவர்களின் எண்ணிக்கையை நாம் ஆக்கவில்லை. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதை) உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவும், நம்பிக்கை கொண்டவர்கள் நம்பிக்கையால் அதிகரிப்பதற்காகவும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும் நம்பிக்கையாளர்களும் சந்தேகிக்காமல் இருப்பதற்காகவும் தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்களும் நிராகரிப்பாளர்களும் இதன் மூலம் அல்லாஹ் என்ன உதாரணத்தை நாடுகிறான் என்று கூறுவதற்காகவும் (அவர்களின் எண்ணிக்கையை நாம் பத்தொன்பதாக ஆக்கினோம்). இவ்வாறுதான், அல்லாஹ் தான் நாடுகிறவர்களை வழிகெடுக்கிறான்; இன்னும், தான் நாடுகிறவர்களை நேர்வழி செலுத்துகிறான். உமது இறைவனின் இராணுவங்களை அவனைத் தவிர (யாரும்) அறிய மாட்டார்கள். இ(ந்த நரகமான)து இல்லை, மனிதர்களுக்கு நல்லுபதேசமாகவே தவிர!
التفاسير:
32:74
كَلَّا وَالْقَمَرِ ۟ۙ
அவ்வாறல்ல. சந்திரன் மீது சத்தியமாக!
التفاسير:
33:74
وَالَّیْلِ اِذْ اَدْبَرَ ۟ۙ
இரவின் மீது சத்தியமாக, அது முடியும் போது!
التفاسير:
34:74
وَالصُّبْحِ اِذَاۤ اَسْفَرَ ۟ۙ
அதிகாலை மீது சத்தியமாக, அது ஒளி வீசும் போது!
التفاسير:
35:74
اِنَّهَا لَاِحْدَی الْكُبَرِ ۟ۙ
நிச்சயமாக அ(ந்த நரகமான)து மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாகும்.
التفاسير:
36:74
نَذِیْرًا لِّلْبَشَرِ ۟ۙ
அ(ந்த நரகமான)து மனிதர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கிறது.
உங்களில் யார் (வழிபாட்டில்) முன்னேறுவதற்கு நாடினாரோ அவருக்கு, அல்லது (நன்மையில்) பின் தங்கி (பாவத்தில் இருந்து) விடுவதற்கு நாடினாரோ அவருக்கு (இந்த நரகம் எச்சரிக்கையாக இருக்கிறது).
التفاسير:
38:74
كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِیْنَةٌ ۟ۙ
ஒவ்வொரு ஆன்மாவும் தான் செய்ததற்காக பிடிக்கப்படும். (-விசாரிக்கப்பட்டு அதன் செயலுக்கு தகுந்த கூலி அதற்கு கொடுக்கப்படும்)
التفاسير:
39:74
اِلَّاۤ اَصْحٰبَ الْیَمِیْنِ ۟ؕۛ
வலது பக்கம் உள்ளவர்களைத் தவிர. (அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்.)
التفاسير:
40:74
فِیْ جَنّٰتٍ ۛ۫— یَتَسَآءَلُوْنَ ۟ۙ
அவர்கள் சொர்க்கங்களில் தங்களுக்குள் கேட்டுக் கொள்வார்கள்,
மாறாக, அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட (வேத) ஏடுகள் தனக்கு தரப்பட வேண்டும் என்று நாடுகிறார்கள்.
التفاسير:
53:74
كَلَّا ؕ— بَلْ لَّا یَخَافُوْنَ الْاٰخِرَةَ ۟ؕ
அவ்வாறல்ல. (-அவ்வாறு கொடுக்கப்பட்டாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.) மாறாக, அவர்கள் மறுமையை பயப்படுவதில்லை. (ஆகவேதான், அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.)
التفاسير:
54:74
كَلَّاۤ اِنَّهٗ تَذْكِرَةٌ ۟ۚ
அவ்வாறல்ல. (-இந்த குர்ஆன் சூனியமும் அல்ல, மனிதர்களின் கூற்றும் அல்ல. மாறாக,) நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்.
التفاسير:
55:74
فَمَنْ شَآءَ ذَكَرَهٗ ۟ؕ
ஆக, யார் நாடுவாரோ இதன் மூலம் அவர் உபதேசம் பெறுவார்.