12.79. யூஸுஃப் கூறினார்: “அநியாயக்காரன் செய்த குற்றத்திற்காக குற்றமற்றவரைத் தண்டிக்கும் வகையில் தனது பொதியிலே அரசனின் அளவுக் குவளையை திருடாத ஒருவரை நாம் பிடித்து வைத்துக்கொள்வதை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக! நாங்கள் அவ்வாறு செய்தால் குற்றவாளியை விட்டு விட்டு நிரபராதியைத் தண்டித்த அநியாயக்காரர்களாக ஆகிவிடுவோம்.
12.80. தமது வேண்டுகோளுக்கு யூஸுஃப் அளித்த பதிலால் அவர்கள் நம்பிக்கையிழந்த போது ஆலோசனை செய்வதற்காக மக்களை விட்டும் தனியே கூடினார்கள். அவர்களில் மூத்த சகோதரர் கூறினார்: “உங்களின் தந்தை உங்களால் தவிரக்க முடியாத ஆபத்து உங்களைச் சூழ்ந்து கொண்டாலே தவிர தம் மகனை திரும்ப அழைத்து வரும்படி உங்களிடம் பெற்ற உறுதியான வாக்குறுதியை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இதற்கு முன்னர் யூஸுஃபின் விஷயத்தில் வாக்குறுதியை நிறைவேற்றாமல் தவறிழைத்துள்ளீர்கள். என் தந்தை எனக்கு திரும்புமாறு அனுமதியளிக்கும் வரை அல்லது என் சகோதரனை விடுவிக்க அல்லாஹ் முடிவு செய்யும் வரை நான் எகிப்தை விட்டுச் செல்லமாட்டேன். அல்லாஹ் மிகச் சிறந்த முறையில் தீர்ப்பளிக்கக்கூடியவன். அவன் உண்மையாகவும் நீதியாகவும் தீர்ப்பளிக்கின்றான்.
12.81. மூத்த சகோதரர் கூறினார்: “உங்களின் தந்தையிடம் திரும்பிச் சென்று அவரிடம் கூறுங்கள்: “உங்களின் மகன் திருடிவிட்டான். அதற்குத் தண்டனையாக எகிப்தின் அரசன் அவரை அடிமையாக்கி விட்டான். அவரது பொதியில் இருந்து எடுப்பதை நாங்கள் கண்ணால் கண்டு அறிந்ததைத்தான் கூறுகிறோம். அவர் திருடுவார் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை, அவ்வாறு அறிந்திருந்தால் அவரைத் திரும்ப அழைத்து வருவோம் என்று உங்களிடம் வாக்குறுதி அளித்திருக்க மாட்டோம்.”
12.82. -எங்களின் தந்தையே!- நாங்கள் உண்மைதான் கூறுகிறோம் என்பதை அறிந்து கொள்வதற்காக நாம் இருந்த எகிப்து மக்களிடம் கேளுங்கள். எங்களுடன் வந்த பயணக் கூட்டத்தினரிடமும் கேளுங்கள். நாங்கள் கூறியதையே அவர்களும் கூறுவார்கள். அவர் திருடியதாக நாங்கள் கூறுவதில் நாங்கள் உண்மையாளர்களே.
12.83. அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “அவர் திருடிவிட்டார் என்று நீங்கள் கூறுவது உண்மையல்ல. யூஸுஃபின் விஷயத்தில் சூழ்ச்சி செய்ததைப் போலவே இவரின் விஷயத்திலும் சூழ்ச்சி செய்வதை உங்களின் மனம் உங்களுக்கு அழகாக்கிக் காட்டி விட்டது. நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேன். அல்லாஹ்விடமே என் கவலைகளை முறையிடுவேன். யூஸுஃப், அவருடைய சகோதரன் மற்றும் மூத்த சகோதரன் என அவர்கள் அனைவரையும் அவன் என்னிடம் கொண்டுவரக்கூடும். அவன் என் நிலையை நன்கறிந்தவன். எனது விடயத்தில் அவன் செய்யும் ஏற்பாட்டில் ஞானம் மிக்கவன்.
12.84. அவர் அவர்களைப் புறக்கணித்து தூரமாகிச் சென்று, கூறினார்: “அந்தோ! யூஸுபின் மீது எனது கவலை எவ்வளவு கடுமையானது. அவர் அதிகமாக அழுததனால் அவர் கண்களின் கருவிழி வெண்மையாகி விட்டது. அவர் துக்கத்தாலும் கவலையாலும் நிரம்பியிருந்தார். மக்களை விட்டும் தம் கவலையை மறைத்துக் கொண்டிருந்தார்.
12.85. யூஸுஃபின் சகோதரர்கள் தங்கள் தந்தையிடம் கூறினார்கள்: -“எங்கள் தந்தையே!- அல்லாஹ்வின் மீது ஆணையாக, உங்களின் நோய் கடினமாகும் வரை அல்லது உண்மையாக நீர் அழிந்து விடும் வரை நீங்கள் யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருக்கிறீர்கள்.
12.86. அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “எனக்கு ஏற்பட்ட துக்கத்தையும் கவலையையும் நான் அல்லாஹ்விடம் மட்டுமே முறையிடுகின்றேன். நீங்கள் அறியாத அல்லாஹ்வின் அருளையும் உபகாரத்தையும் நிர்ப்பந்தத்தில் உள்ளவனுக்கு பதிலளிப்பதையும் துன்பத்தில் அகப்பட்டவருக்கு கூலி வழங்குவதையும் நான் அறிவேன்.
التفاسير:
من فوائد الآيات في هذه الصفحة:
• لا يجوز أخذ بريء بجريرة غيره، فلا يؤخذ مكان المجرم شخص آخر.
1. குற்றவாளிக்குப் பகரமாக குற்றமற்றவரைத் தண்டிப்பது முற்றிலும் தடுக்கப்பட்டதாகும். எனவே குற்றவாளியின் இடத்திற்கு வேறொருவர் எடுக்கப்படக் கூடாது.
• الصبر الجميل هو ما كانت فيه الشكوى لله تعالى وحده.
2. அல்லாஹ்விடம் மட்டுமே கவலையையும் துக்கத்தையும் முறையிடுவதே அழகிய பொறுமையாகும்.
• على المؤمن أن يكون على تمام يقين بأن الله تعالى يفرج كربه.
3. அல்லாஹ் தன் துன்பங்களைப் போக்குவான் என்பதில் நம்பிக்கையாளன் உறுதியான நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும்.