《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
81 : 9

فَرِحَ الْمُخَلَّفُوْنَ بِمَقْعَدِهِمْ خِلٰفَ رَسُوْلِ اللّٰهِ وَكَرِهُوْۤا اَنْ یُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَقَالُوْا لَا تَنْفِرُوْا فِی الْحَرِّ ؕ— قُلْ نَارُ جَهَنَّمَ اَشَدُّ حَرًّا ؕ— لَوْ كَانُوْا یَفْقَهُوْنَ ۟

9.81. அல்லாஹ்வுடைய தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு தபூக் போரை விட்டும் பின்வாங்கிய நயவஞ்சகர்கள் தாம் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியாததையிட்டு மகிழ்ச்சியடைந்தார்கள். நம்பிக்கையாளர்கள் போர் புரிவதைப் போல் தங்களின் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை வெறுத்தார்கள். தங்களின் சகோதரர்களான நயவஞ்சகர்களை மனம்தளரச் செய்து அவர்களிடம், “வெப்ப காலத்தில் புறப்படாதீர்கள்” என்று கூறினார்கள். தபூக் போர் வெப்ப காலத்தில் நடைபெற்றது -தூதரே!- அவர்களிடம் நீர் கூறுவீராக: “அவர்கள் அறிவார்களானால் நயவஞ்சகர்களுக்காக காத்திருக்கும் நரக நெருப்பு இவர்கள் விரண்டோடும் இந்த வெப்பத்தைவிட அதிக வெப்பமானது.” info
التفاسير:
这业中每段经文的优越:
• الكافر لا ينفعه الاستغفار ولا العمل ما دام كافرًا.
1. நிராகரித்த நிலையில் செய்யப்படும் பாவமன்னிப்பும் நற்செயலும் நிராகரிப்பாளனுக்கு எப்பயனையும் அளிக்காது. info

• الآيات تدل على قصر نظر الإنسان، فهو ينظر غالبًا إلى الحال والواقع الذي هو فيه، ولا ينظر إلى المستقبل وما يتَمَخَّض عنه من أحداث.
2. வசனங்கள் மனிதனின் குறுகிய பார்வையை சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில் அவன் பெரும்பாலும் தற்போதைய அவன் இருக்கும் நிலமையையே பார்க்கிறான். எதிர்காலம் அதில் நிகழப்போகும் எதைக் குறித்தும் சிந்திப்பதில்லை. info

• التهاون بالطاعة إذا حضر وقتها سبب لعقوبة الله وتثبيطه للعبد عن فعلها وفضلها.
3. குறிப்பிட்ட நேரத்தில் வணக்கவழிபாடுகளைச் செய்வதில் ஏற்படும் கவனயீம் அல்லாஹ்வின் தண்டனைக்கும் அதனைச் செய்வது மற்றும் அதன் சிறப்பு என்பவற்றை விட்டும் தூரமாவதற்குக் காரணமாகும். info

• في الآيات دليل على مشروعية الصلاة على المؤمنين، وزيارة قبورهم والدعاء لهم بعد موتهم، كما كان النبي صلى الله عليه وسلم يفعل ذلك في المؤمنين.
4. இறைவிசுவாசிகளின் மீது தொழுகை நடாத்துதல், அவர்களது மண்ணறைகளைத் தரிசித்தல் அவர்களது மரணத்தின் பின் அவர்களுக்காக பிரார்த்தனை புரிதல் ஆகியவை அனுமதிக்கப்பட்டதாகும் என்பதற்கு மேற்கூறிய வசனங்கள் ஆதாரமாகும். அவ்வாறே நம்பிக்கையாளர்கள் விடயத்தில் நபியவர்கள் நடந்துகொண்டார்கள். info