《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
93 : 4

وَمَنْ یَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهٗ جَهَنَّمُ خَلِدًا فِیْهَا وَغَضِبَ اللّٰهُ عَلَیْهِ وَلَعَنَهٗ وَاَعَدَّ لَهٗ عَذَابًا عَظِیْمًا ۟

4.93. வேண்டுமென்றே அநியாயமாக ஒரு நம்பிக்கையாளனைக் கொலை செய்பவர் அதனை அனுமதியாகக் கருதினால் அல்லது அச்செயலுக்கு பாவமன்னிப்புக் கோராவிட்டால் அவர் நிரந்தரமாக நரகத்தில் தங்கிவிடுவார். அல்லாஹ் அவர் மீது கோபம்கொள்வான். தன் அருளிலிருந்து அவரைத் தூரமாக்குவான். அவர் பெரும் பாவத்தை சம்பாதித்ததன் காரணமாக அவருக்கு அவன் கடுமையான வேதனையைத் தயார்படுத்திவைத்துள்ளான்.
info
التفاسير:
这业中每段经文的优越:
• جاء القرآن الكريم معظِّمًا حرمة نفس المؤمن، وناهيًا عن انتهاكها، ومرتبًا على ذلك أشد العقوبات.
1. குர்ஆன் நம்பிக்கையாளரின் உயிரைப் புனிதத்தை மகிமைப்படுத்தி அதனை மீறுவதைத் தடைசெய்துள்ளது. அவ்வாறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையை விதித்துள்ளது. info

• من عقيدة أهل السُّنَّة والجماعة أن المؤمن القاتل لا يُخلَّد أبدًا في النار، وإنما يُعذَّب فيها مدة طويلة ثم يخرج منها برحمة الله تعالى.
2. நம்பிக்கைகொண்ட கொலையாளி நரகத்தில் நிரந்தரமாக இருக்கமாட்டான்; மாறாக நீண்ட காலம் நரகில் தண்டிக்கப்பட்ட பின் அல்லாஹ்வின் அருளால் அதிலிருந்து வௌியேற்றப்படுவான் என்பதே அஹ்லுஸ் ஸுன்னாக்களின் கொள்கையாகும். info

• وجوب التثبت والتبيُّن في الجهاد، وعدم الاستعجال في الحكم على الناس حتى لا يُعتدى على البريء.
3.போரில் உறுதிப்படுத்திக்கொள்வதும் நிரபராதி அநீதியிழைக்கப்படக்கூடாது என்பதற்காக மக்களைப் பற்றி முடிவுசெய்யும் போது அவசரப்படாமல் நடந்துகொள்வதும் கட்டாயமாகும். info