《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
185 : 3

كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ؕ— وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ؕ— وَمَا الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ ۟

3.185. எல்லா உயிரும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். எனவே இவ்வுலக வாழ்வைக்கொண்டு எவரும் ஏமாந்துவிட வேண்டாம். மறுமைநாளில்தான் குறைவின்றி முழுமையாக நீங்கள் கூலிவழங்கப்படுவீர்கள். யாரை அல்லாஹ் நரகத்திலிருந்து தூரமாக்கி சுவனத்தில் நுழைவித்தானோ அவர் தாம் விரும்பும் நன்மைகளைப் பெற்றுவிட்டார்; தாம் அஞ்சும் தீங்குகளிலிருந்து பாதுகாப்புபெற்றுவிட்டார். இவ்வுலக வாழ்க்கை அழியக்கூடிய இன்பங்கள்தாம். ஏமாறுபவனே இதன்மீது மோகம்கொள்வான். info
التفاسير:
这业中每段经文的优越:
• من سوء فعال اليهود وقبيح أخلاقهم اعتداؤهم على أنبياء الله بالتكذيب والقتل.
1. யூதர்கள் அல்லாஹ்வின் தூதர்களை மறுத்தும் கொலை செய்தும் வரம்புமீறியமை அவர்களது மோசமான செயற்பாடுகளிலும், கெட்டகுணங்களிலும் ஒன்றாகும். info

• كل فوز في الدنيا فهو ناقص، وإنما الفوز التام في الآخرة، بالنجاة من النار ودخول الجنة.
2. உலக வெற்றிகள் அனைத்துமே குறையுள்ளதே. பரிபூரண வெற்றி மறுமையில்தான். நரகிலிருந்து தப்பி சுவனத்தில் நுழைவதே அவ்வெற்றியாகும். info

• من أنواع الابتلاء الأذى الذي ينال المؤمنين في دينهم وأنفسهم من قِبَل أهل الكتاب والمشركين، والواجب حينئذ الصبر وتقوى الله تعالى.
3. வேதக்காரர்கள் இணைவைப்பாளர்கள் மூலம் முஃமின்களுக்கு அவர்களது மார்க்கத்திலும் அவர்களது சொந்தவிடயத்திலும் ஏற்படும் நோவினைகள் சோதனைகளில் ஒரு வகையே. இது போன்ற நிலமைகளில் பொறுமையைக் கடைபிடித்து அல்லாஹ்வை அஞ்சுவதே கடமையாகும். info