《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
159 : 3

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ ۚ— وَلَوْ كُنْتَ فَظًّا غَلِیْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ ۪— فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِی الْاَمْرِ ۚ— فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَوَكِّلِیْنَ ۟

3.159. தூதரே! அல்லாஹ்வின் பெரும் அருளினால்தான் உம் தோழர்களுடன் மென்மையான முறையில் நடந்துகொள்கிறீர். சொல்லிலும் செயலிலும் நீர் கடுமையானவராக, கடினமனம் கொண்டவராக இருந்திருந்தால் உம்மை விட்டு அவர்கள் விலகிச் சென்றிருப்பார்கள். அவர்கள் உமக்குச் செய்த குறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீராக. அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருவீராக. ஆலோசனை தேவைப்படும் விவகாரங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக. ஆலோசனைக்குப் பின் ஏதேனும் விஷயத்தில் நீர் உறுதிகொண்டுவிட்டால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவராக அதனைச் செயல்படுத்துவீராக. தன்மீது முழுமையாக நம்பிக்கை வைப்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான், அவர்களுக்கு வழிகாட்டுகிறான். அவர்களைப் பலப்படுத்துகிறான். info
التفاسير:
这业中每段经文的优越:
• النصر الحقيقي من الله تعالى، فهو القوي الذي لا يحارب، والعزيز الذي لا يغالب.
1. உண்மையான உதவி அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. அவனை எதிர்க்க முடியாதளவு வல்லமைமிக்கவன், அவன் யாவற்றையும் மிகைத்தவன், யாராலும் அவனை மிகைத்துவிட முடியாது. info

• لا تستوي في الدنيا حال من اتبع هدى الله وعمل به وحال من أعرض وكذب به، كما لا تستوي منازلهم في الآخرة.
2. அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்றி அதன்படி செயல்பட்டவர்களும் அதனைப் புறக்கணித்து, நிராகரித்தவர்களும் மறுமைநாளில் எவ்வாறு அந்தஸ்தில் சமமாகமாட்டார்களோ அது போன்றே இவ்வுலகிலும் அவர்கள் சமமான நிலையில் இருக்கமாட்டார்கள். info

• ما ينزل بالعبد من البلاء والمحن هو بسبب ذنوبه، وقد يكون ابتلاء ورفع درجات، والله يعفو ويتجاوز عن كثير منها.
3.அடியானுக்கு நிகழும் சோதனைகள் அவனது பாவங்களின் வினைகளேயாகும். சில வேளை சோதனையுடன் அந்தஸ்துகளில் உயர்வும் கிடைக்கும். அல்லாஹ் பாவங்களில் பெரும்பாலானவற்றை மன்னித்துவிடுகிறான். info