《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
88 : 23

قُلْ مَنْ بِیَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَیْءٍ وَّهُوَ یُجِیْرُ وَلَا یُجَارُ عَلَیْهِ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟

23.88. நீர் அவர்களிடம் கூறுவீராக: “தனது அதிகாரத்தை விட்டும் எதுவும் தவறிவிட முடியாதளவு அனைத்து அதிகாரங்களும் யாருடைய கையில் உள்ளது? அவன் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு உதவிசெய்கிறான். அவன் யாருக்கேனும் தீங்கிழைக்க நாடிவிட்டால் அதிலிருந்து யாரும் தப்பி தன்னை விட்டும் அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் கூறுங்கள். info
التفاسير:
这业中每段经文的优越:
• عدم اعتبار الكفار بالنعم أو النقم التي تقع عليهم دليل على فساد فطرهم.
1. நிராகரிப்பாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் அருட்கொடைகளையோ, தண்டனைகளையோ கொண்டு படிப்பினை பெறாமை, அவர்களின் இயல்பு சீர்கெட்டுப்போயுள்ளது என்பதற்கான ஆதாரமாகும். info

• كفران النعم صفة من صفات الكفار.
2. அருட்கொடைகளுக்கு நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்வது நிராகரிப்பாளர்களின் பண்பாகும். info

• التمسك بالتقليد الأعمى يمنع من الوصول للحق.
3. எதையும் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவது சத்தியத்தை அடைவதை விட்டும் தடுக்கும். info

• الإقرار بالربوبية ما لم يصحبه إقرار بالألوهية لا ينجي صاحبه.
4. அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் அவன் ஒருவனே படைத்துப் பராமரிப்பவன் என்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது வெற்றியை வழங்காது. info