《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
196 : 2

وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ ؕ— فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَیْسَرَ مِنَ الْهَدْیِ ۚ— وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰی یَبْلُغَ الْهَدْیُ مَحِلَّهٗ ؕ— فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِیْضًا اَوْ بِهٖۤ اَذًی مِّنْ رَّاْسِهٖ فَفِدْیَةٌ مِّنْ صِیَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍ ۚ— فَاِذَاۤ اَمِنْتُمْ ۥ— فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَی الْحَجِّ فَمَا اسْتَیْسَرَ مِنَ الْهَدْیِ ۚ— فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ ثَلٰثَةِ اَیَّامٍ فِی الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْ ؕ— تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ؕ— ذٰلِكَ لِمَنْ لَّمْ یَكُنْ اَهْلُهٗ حَاضِرِی الْمَسْجِدِ الْحَرَامِ ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟۠

2.196. அல்லாஹ்வின் திருப்திக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக நிறைவேற்றுங்கள். நோயினாலோ எதிரிகளினாலோ நீங்கள் அவற்றை முழுமையாக நிறைவேற்ற முடியாவிட்டால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் உங்களால் இயன்ற பலிப்பிராணிகளை அறுத்து உங்களின் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுங்கள். பலிப்பிராணி அறுக்கப்படும் இடத்தை அடையும்வரை தலைமுடியை மழிக்கவோ குறைக்கவோ செய்யாதீர்கள். அது ஹரமை விட்டுத் தடுக்கப்பட்டால் தடுக்கப்பட்ட இடத்திலேயே அறுத்துக் கொள்ளுங்கள். அது தடுக்கப்படவில்லையெனில் ஹரமில் அறுக்கப்படும் நாளான துல்ஹஜ் பத்தாம் தினத்திலும் அதற்கு அடுத்த "அய்யாமுத் தஷ்ரீக்" என்னும் மூன்று நாட்களிலும் அறுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நோயாளியாக அல்லது தலையில் பேன் போன்ற பூச்சிகளால் பாதிக்கப்பட்டு, உங்களின் தலைமுடியை மழித்துக் கொள்வதில் எந்தக் குற்றமும் இல்லை. ஆனால் அதற்கான பரிகாரத்தை அளித்துவிடுங்கள். அதற்கான பரிகாரம், மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் அல்லது ஹரமில் உள்ள ஆறு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது ஒரு ஆட்டை அறுத்து ஹரமிலுள்ள ஏழைகளுக்கு அதனைப் பங்கிட வேண்டும். நீங்கள் அச்சமற்றவர்களாக இருந்து ஹஜ்ஜுடைய காலத்தில் உம்ராவையும் நிறைவேற்றி அதே வருடம் ஹஜ்ஜுக்காக நிய்யத் வைக்கும் வரை இஹ்ராமின் மூலம் தடைசெய்யப்பட்டவற்றை அனுபவிக்க (தமத்துஃ முறையில் நிய்யத் வைக்க) விரும்பினால், ஒரு ஆட்டை அறுத்து அல்லது ஒட்டகத்திலோ, மாட்டிலோ ஏழு பங்கில் ஒருவராக இணைந்து உங்களால் இயன்றதைப் பலியிட்டுவிடுங்கள். உங்களால் பலிப்பிராணியை பெறமுடியவில்லையெனில் அதற்குப் பகரமாக ஹஜ்ஜின் கிரியைகளுக்குரிய காலத்தில் மூன்று நாட்களும், வீடுதிரும்பிய பிறகு ஏழுநாட்களும் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். மொத்தம் முழுமையான பத்து நாட்களாகும். தமத்துஃ முறையில் நிய்யத் வைத்து பலிப்பிராணியை பலியிடுவது, முடியாதபட்சத்தில் நோன்பு நோற்பது என்ற இந்தச் சட்டம் ஹரம் எல்லை மற்றும் அதன் அருகில் வசிக்காதவர்களுக்காகும். ஹரமிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு தமத்துஃ முறையில் ஹஜ் செய்வதற்கு எவ்விதத் தேவையுமில்லை. அவர்கள் அருகில் வசிப்பதால் வெறும் தவாப் மாத்திரம் போதுமானது. ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ராவை நிறைவேற்றவேண்டிய அவசியமில்லை. அல்லாஹ் விதித்த கட்டளைகளையும் வரம்புகளையும் பேணி அவனுக்கு அஞ்சுங்கள். தன்னுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
info
التفاسير:
这业中每段经文的优越:
• مقصود الجهاد وغايته جَعْل الحكم لله تعالى وإزالة ما يمنع الناس من سماع الحق والدخول فيه.
1. ஜிஹாதின் நோக்கம், மக்கள் சத்தியத்தைச் செவியேற்பதற்கும் அதனை ஏற்றுக் கொள்வதற்கும் தடையாக இருக்கும் விஷயங்களை அகற்றி அதிகாரம் அனைத்தையும் அல்லாஹ்வுக்கு ஆக்குவதேயாகும். info

• ترك الجهاد والقعود عنه من أسباب هلاك الأمة؛ لأنه يؤدي إلى ضعفها وطمع العدو فيها.
2. ஜிஹாதை விட்டுவிடுதலும் புறக்கணித்தலும் சமூகம் வீழ்ச்சியடைவதற்கான காரணிகளில் ஒன்றாகும். இது சமூகத்தை பலவீனப்படுத்தி முஸ்லிம்களை வீழ்த்தலாம் என்ற ஒரு பேராசையை எதிரிகளுக்கு வழங்குகிறது. info

• وجوب إتمام الحج والعمرة لمن شرع فيهما، وجواز التحلل منهما بذبح هدي لمن مُنِع عن الحرم.
3.ஹஜ்ஜையும் உம்ராவையும் ஆரம்பித்தவர்கள் பரிபூரணமாக செய்து முடிக்கவேண்டும். ஆனால் ஆரம்பித்த பின் ஹரமிற்கு செல்லமுடியாமல் தடுக்கப்பட்டவர் பலிப்பிராணியைப் பலியிட்டு அவ்விரண்டு வழிபாடுகளிலிருந்தும் விடுபடலாம். info