Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
36 : 9

اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِیْ كِتٰبِ اللّٰهِ یَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ ؕ— ذٰلِكَ الدِّیْنُ الْقَیِّمُ ۙ۬— فَلَا تَظْلِمُوْا فِیْهِنَّ اَنْفُسَكُمْ ۫— وَقَاتِلُوا الْمُشْرِكِیْنَ كَآفَّةً كَمَا یُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً ؕ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ ۟

9.36. அல்லாஹ்வின் தீர்ப்பிலும் ஏற்பாட்டிலும் வருடம் பன்னிரண்டு மாதங்களைக் கொண்டதாகும். வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த போதே லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் பதிவேட்டில் அவ்வாறே அல்லாஹ் பதிந்து வைத்துள்ளான். அதில் நான்கு மாதங்களில் போர்புரிவதை அல்லாஹ் தடைசெய்துள்ளான். (அவை, துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய தொடராக வரும் மூன்று மாதங்களும் தனியாக இடம்பெறும் ரஜப் மாதமும் ஆகும்). வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள், அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை என்று மேற்கூறப்பட்ட விடயமே நேரான மார்க்கமாகும். எனவே தடைசெய்யப்பட்ட மாதங்களில் போர் செய்து, அதன் புனிதத்தை சீர்குழைத்து அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துவிடாதீர்கள். இணைவைப்பாளர்கள் உங்கள் அனைவருடனும் போரிடுவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போரிடுங்கள். தன் கட்டளைகளைச் செயல்படுத்தி, தான் தடுத்தவற்றிலிருந்து விலகி தன்னை அஞ்சுவோருக்கு உதவிசெய்தல், அவர்களை உறுதிப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் அவர்களுடன் இருக்கின்றான். யாருடன் அல்லாஹ் இருக்கின்றானோ அவரை யாராலும் வெல்ல முடியாது. info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• دين الله ظاهر ومنصور مهما سعى أعداؤه للنيل منه حسدًا من عند أنفسهم.
1. எதிரிகள் தம்மிடமுள்ள பொறாமையினால் எவ்வளவுதான் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு தீங்கு செய்ய முயற்சி செய்தாலும் அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்கியதாகவே இருக்கும். info

• تحريم أكل أموال الناس بالباطل، والصد عن سبيل الله تعالى.
2. மக்களின் செல்வங்களை தவறானமுறையில் உண்ணக்கூடாது. அல்லாஹ்வின் பாதையை விட்டும் அவர்களைத் தடுக்கக் கூடாது. info

• تحريم اكتناز المال دون إنفاقه في سبيل الله.
3. அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்காமல் செல்வங்களை சேர்த்து வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. info

• الحرص على تقوى الله في السر والعلن، خصوصًا عند قتال الكفار؛ لأن المؤمن يتقي الله في كل أحواله.
4. இரகசியத்திலும், பகிரங்கத்திலும் குறிப்பாக நிராகரிப்போருடன் போரிடும் போதும் இறையச்சத்தில் கவனம் செலுத்த வேண்டும். நிச்சயமாக முஃமின் இறைவனை சகல நிலைமைகளிலும் அஞ்சுவான். info