Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

Numero ng Pahina:close

external-link copy
20 : 73

اِنَّ رَبَّكَ یَعْلَمُ اَنَّكَ تَقُوْمُ اَدْنٰی مِنْ  الَّیْلِ وَنِصْفَهٗ وَثُلُثَهٗ وَطَآىِٕفَةٌ مِّنَ الَّذِیْنَ مَعَكَ ؕ— وَاللّٰهُ یُقَدِّرُ الَّیْلَ وَالنَّهَارَ ؕ— عَلِمَ اَنْ لَّنْ تُحْصُوْهُ فَتَابَ عَلَیْكُمْ فَاقْرَءُوْا مَا تَیَسَّرَ مِنَ الْقُرْاٰنِ ؕ— عَلِمَ اَنْ سَیَكُوْنُ مِنْكُمْ مَّرْضٰی ۙ— وَاٰخَرُوْنَ یَضْرِبُوْنَ فِی الْاَرْضِ یَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللّٰهِ ۙ— وَاٰخَرُوْنَ یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۖؗ— فَاقْرَءُوْا مَا تَیَسَّرَ مِنْهُ ۙ— وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا ؕ— وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَیْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ هُوَ خَیْرًا وَّاَعْظَمَ اَجْرًا ؕ— وَاسْتَغْفِرُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠

73.20. -தூதரே! -நீர் சில சமயங்களில் இரவில் மூன்றில் ஒரு பகுதிக்குக் குறைவாக தொழுகின்றீர் என்பதையும் சில சமயங்களில் பாதி இரவு வரையும் சில சமயங்களில் மூன்றில் ஒரு பகுதி நேரம் வரையிலும் தொழுகின்றீர் என்பதையும் உம்முடன் நம்பிக்கையாளர்களில் ஒரு பிரிவினரும் தொழுகிறார்கள் என்பதையும் உம் இறைவன் நன்கு அறிவான். அல்லாஹ்வே இரவையும் பகலையும் நிர்ணயிக்கிறான். அவ்விரண்டின் நேரங்களையும் அவனே வரையறை செய்கிறான். நீங்கள் அதன் நேரங்களைக் கணக்கிடவோ, கட்டுப்படுத்தவோ முடியாது என்பதை அவன் அறிவான். அதில் வேண்டப்பட்டதை தேடி அதிக நேரம் நின்று வணங்குவது உங்களுக்குச் சிரமமானது. எனவே அல்லாஹ் உங்களை மன்னித்துவிட்டான். அதனால் இரவில் உங்களால் இயன்ற அளவு தொழுதுகொள்ளுங்கள். -நம்பிக்கையாளர்களே!- உங்களில் நோயால் கஷ்டப்படக்கூடிய நோயாளிகளும் வாழ்வாதாரம் தேடி அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்யக்கூடியவர்களும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அவனுடைய வாக்கை மேலோங்கச் செய்வதற்காக அவனது பாதையில் போரிடக்கூடியவர்களும் உள்ளார்கள் என்பதை அல்லாஹ் அறிவான். இவர்கள் இரவில் நின்று வணங்குவது சிரமமானதாகும். எனவே உங்களால் இயன்ற அளவு இரவில் தொழுது கொள்ளுங்கள். கடமையாக்கப்பட்ட தொழுகைகளை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுங்கள். உங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்குங்கள். அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களைச் செலவு செய்யுங்கள். நீங்கள் உங்களுக்காக சேர்த்துவைத்த எந்த நன்மையானாலும் அதைவிட சிறந்த கூலியைப் பெறுவீர்கள். அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• المشقة تجلب التيسير.
1. சிரமம் இலகுவைக் கொண்டுவரும். info

• وجوب الطهارة من الخَبَث الظاهر والباطن.
2. வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான அசுத்தங்களிலிருந்து தூய்மையாக இருப்பது கட்டாயமாகும். info

• الإنعام على الفاجر استدراج له وليس إكرامًا.
3. பாவிக்கு வழங்கப்படும் அருட்கொடை விட்டுப்பிடிப்பதாகும். அது கௌரவித்தலல்ல. info