Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
176 : 7

وَلَوْ شِئْنَا لَرَفَعْنٰهُ بِهَا وَلٰكِنَّهٗۤ اَخْلَدَ اِلَی الْاَرْضِ وَاتَّبَعَ هَوٰىهُ ۚ— فَمَثَلُهٗ كَمَثَلِ الْكَلْبِ ۚ— اِنْ تَحْمِلْ عَلَیْهِ یَلْهَثْ اَوْ تَتْرُكْهُ یَلْهَثْ ؕ— ذٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ— فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ یَتَفَكَّرُوْنَ ۟

7.176. இந்த வசனங்களின் மூலம் நாம் அவனுக்குப் பயனளிக்க நாடியிருந்தால் அவனுக்கு நற்செயல் புரியும் வாய்ப்பை வழங்கி இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவனுடைய அந்தஸ்தை உயர்த்தியிருப்போம். ஆயினும் அவன் தனது மறுமையை விட இம்மைக்கு முன்னுரிமை வழங்கி தன் மனம் விரும்பும் அசத்தியத்தைப் பின்பற்றி இவ்வுலக இன்பங்களின்பால் சாய்ந்து தனது தோல்விக்கு வழிவகுப்பவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். உலக இன்பங்களின் மீது அவன் கொண்ட பேராசைக்கு உதாரணம் நாயைப் போன்றது. அது எல்லா நிலைகளிலும் மூச்சிறைத்துக் கொண்டே இருக்கும். அமர்ந்து இருந்தாலும் மூச்சிறைக்கும். விரட்டப்பட்டாலும் மூச்சிறைக்கும். மேற்கூறப்பட்ட உதாரணம் நம் சான்றுகளை நிராகரிக்கும் வழிகெட்ட மக்களுக்குரிய உதாரணமாகும் . தூதரே! அவர்கள் சிந்தித்து நிராகரிப்பிலிருந்தும் வழிகேட்டிலிருந்தும் விலகுவதற்காக அவர்களுக்கு சம்பவங்களை எடுத்துரைப்பீராக. info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• المقصود من إنزال الكتب السماوية العمل بمقتضاها لا تلاوتها باللسان وترتيلها فقط، فإن ذلك نَبْذ لها.
1. வான வேதங்கள் இறக்கப்பட்டதன் நோக்கம் அதன்படி செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான். வெறுமனே இராகமாக ஓதுவதற்காக அல்ல. அதன்படி செயல்படாமல் வெறுமனே இராகமாக ஓதுவது அதனைப் புறக்கணிப்பதாகும். info

• أن الله خلق في الإنسان من وقت تكوينه إدراك أدلة الوحدانية، فإذا كانت فطرته سليمة، ولم يدخل عليها ما يفسدها أدرك هذه الأدلة، وعمل بمقتضاها.
2. அல்லாஹ் மனிதனைப் படைத்த போதே அவனுடைய இயல்பில் அல்லாஹ் ஒருவனே என்பதற்கான ஆதாரங்களபை் புரிந்துகொள்ளும் ஆற்றலை வைத்துவிட்டான். அவனது இயல்பை சிதைக்கும் காரணிகளால் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக இருக்கும் வரை அவ்வாதாரங்களைப் புரிந்து அதன்படி செயற்படுவான். info

• في الآيات عبرة للموفَّقين للعمل بآيات القرآن؛ ليعلموا فضل الله عليهم في توفيقهم للعمل بها؛ لتزكو نفوسهم.
3. தங்களின் ஆன்மாக்கள் பரிசுத்தமடைவதற்காக அல்குர்ஆனின் வசனங்களின் படி செயற்பட அவர்களுக்கு வாய்ப்பளித்து அல்லாஹ் அவர்கள் மீது புரிந்த அருளை அவர்கள் அறிய வேண்டும் என்பதற்காக, குர்ஆனுடைய வசனங்களின்படி செயல்படும் வாய்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கு இவ்வசனங்களிலே படிப்பினை இருக்கின்றது. info

• في الآيات تلقين للمسلمين للتوجه إلى الله تعالى بطلب الهداية منه والعصمة من مزالق الضلال.
4.அல்லாஹ்விடமே நேர்வழியையும் வழிகேடுகளில் இருந்து பாதுகாப்பையும் வேண்டுவதன் மூலம் அல்லாஹ்வின் பக்கமே முஸ்லிம்கள் திரும்ப வேண்டும் என்ற பாடத்தை மேற்கூறிய வசனங்கள் முஸ்லிம்களுக்குப் போதிக்கின்றன. info