Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

Numero ng Pahina:close

external-link copy
27 : 67

فَلَمَّا رَاَوْهُ زُلْفَةً سِیْٓـَٔتْ وُجُوْهُ الَّذِیْنَ كَفَرُوْا وَقِیْلَ هٰذَا الَّذِیْ كُنْتُمْ بِهٖ تَدَّعُوْنَ ۟

67.27. அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிறைவேறி அவர்கள் மறுமை நாளில் வேதனையை அருகில் காணும்போது அல்லாஹ்வை நிராகரித்தவர்களின் முகங்கள் கருத்து மாற்றமடைந்து விடும். அவர்களிடம் கூறப்படும்: “இதைத்தான் நீங்கள் உலகில் விரைவாக வேண்டிக் கொண்டிருந்தீர்கள்.” info
التفاسير:

external-link copy
28 : 67

قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَهْلَكَنِیَ اللّٰهُ وَمَنْ مَّعِیَ اَوْ رَحِمَنَا ۙ— فَمَنْ یُّجِیْرُ الْكٰفِرِیْنَ مِنْ عَذَابٍ اَلِیْمٍ ۟

67.28. -தூதரே!- பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்களுக்கு மறுப்பாகக் கூறுவீராக: “எனக்குக் கூறுங்கள், அல்லாஹ் எனக்கு மரணத்தை அளித்துவிட்டால் அல்லது என்னுடன் இருக்கும் நம்பிக்கையாளர்களை மரணிக்கச் செய்துவிட்டால் அல்லது எங்கள் மீது கருணைகொண்டு எமது தவணைகளைப் பிற்படுத்தினால், நிராகரிப்பாளர்களை வேதனைமிக்க தண்டனையிலிருந்து யார்தான் காப்பாற்ற முடியும்? ஒருவரும் அவர்களை அதிலிருந்து காப்பாற்ற முடியாது.
info
التفاسير:

external-link copy
29 : 67

قُلْ هُوَ الرَّحْمٰنُ اٰمَنَّا بِهٖ وَعَلَیْهِ تَوَكَّلْنَا ۚ— فَسَتَعْلَمُوْنَ مَنْ هُوَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

67.29. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “உங்களைத் தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்று அழைப்பவன் அளவிலாக் கருணையாளன். நாங்கள் அவன் மீதே நம்பிக்கைகொண்டோம். எங்களின் எல்லா விவகாரங்களிலும் நாங்கள் அவனை மட்டுமே சார்ந்துள்ளோம். நிச்சயமாக நீங்கள் யார் நேரான வழியில் யார் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றார்கள் என்பதை விரைவில் -சந்தேகம் இல்லாமல்-அறிந்துகொள்வீர்கள். info
التفاسير:

external-link copy
30 : 67

قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَصْبَحَ مَآؤُكُمْ غَوْرًا فَمَنْ یَّاْتِیْكُمْ بِمَآءٍ مَّعِیْنٍ ۟۠

67.30. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: நீங்கள் எனக்குக் கூறுங்கள், நீங்கள் பருகும் நீர் நீங்கள் எடுக்க முடியாத அளவு பூமியின் ஆழத்திற்குச் சென்றுவிட்டால் அதிகமாக ஓடக்கூடிய நீரை உங்களுக்கு வேறு யார் கொண்டுவருவார்? அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• اتصاف الرسول صلى الله عليه وسلم بأخلاق القرآن.
1. நபியவர்கள் குர்ஆன் கூறும் பண்புகளைப் பெற்றவர்களாக இருக்கின்றார்கள். info

• صفات الكفار صفات ذميمة يجب على المؤمن الابتعاد عنها، وعن طاعة أهلها.
2. நிராகரிப்பாளர்களின் பண்புகள் மோசமான பண்புகளாகும். அவற்றை விட்டும் அவர்களை வழிப்படுவதை விட்டும் விலகியிருப்பது நம்பிக்கையாளனின்மீது கட்டாயமாகும். info

• من أكثر الحلف هان على الرحمن، ونزلت مرتبته عند الناس.
3. அதிகமாக சத்தியம் செய்பவன் இறைவனிடம் தாழ்ந்துவிடுவதோடு மனிதர்களிடமும் அவனது மதிப்புக் குறைந்துவிடுகிறது. info