Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
15 : 57

فَالْیَوْمَ لَا یُؤْخَذُ مِنْكُمْ فِدْیَةٌ وَّلَا مِنَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ— مَاْوٰىكُمُ النَّارُ ؕ— هِیَ مَوْلٰىكُمْ ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟

57.15 -நயவஞ்சகர்களே!- இன்றைய தினம் உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து விடுவிப்பதற்கு உங்களிடம் எந்த ஈட்டுத் தொகையும் பெறப்படாது. அல்லாஹ்வை வெளிப்படையாக நிராகரித்தவர்களிடமும் எந்த ஈட்டுத் தொகையும் பெறப்படாது. உங்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் நரகமே சேருமிடமாகும். அது உங்களுக்குத் தகுதியானது. நீங்களும் அதற்குத் தகுதியானவர்கள். அது மிகவும் மோசமான சேருமிடமாகும். info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• امتنان الله على المؤمنين بإعطائهم نورًا يسعى أمامهم وعن أيمانهم.
1. நம்பிக்கையாளர்களுக்கு முன்னாலும் வலப்புறமும் இலங்கிக்கொண்டிருக்கும் ஒளியை வழங்கி அவர்கள் மீது அல்லாஹ் அருள் பொழிந்துள்ளான். info

• المعاصي والنفاق سبب للظلمة والهلاك يوم القيامة.
2. பாவங்களும் நயவஞ்சகமும் மறுமை நாளின் இருளுக்கும் அழிவுக்கும் காரணமாகும். info

• التربُّص بالمؤمنين والشك في البعث، والانخداع بالأماني، والاغترار بالشيطان: من صفات المنافقين.
3. நம்பிக்கையாளர்களுக்கு (தீங்கு வரும் என்று) எதிர்பார்த்துக் கொண்டிருப்பது, மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதைக்குறித்து சந்தேகம்கொள்வது, (பொய்யான) எதிர்பார்ப்புகளைக் கொண்டு ஏமாறுவது, ஷைத்தானால் ஏமாற்றமடைவது ஆகியவை நயவஞ்சகர்களின் பண்புகளாகும். info

• خطر الغفلة المؤدية لقسوة القلوب.
4. இருகிய உள்ளத்தின்பால் கொண்டுசெல்லும் அலட்சியத்தின் விபரீதம். info