Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
41 : 4

فَكَیْفَ اِذَا جِئْنَا مِنْ كُلِّ اُمَّةٍ بِشَهِیْدٍ وَّجِئْنَا بِكَ عَلٰی هٰۤؤُلَآءِ شَهِیْدًا ۟ؕؔ

4.41. மறுமைநாளில் நாம் ஒவ்வொரு தூதரையும் அவரவர் சமூகம் செய்தவற்றுக்குச் சாட்சியாகவும் உம்மை உமது சமூகத்துக்கு சாட்சியாளராகவும்கொண்டுவரும் போது நிலைமை என்னவாகும்? info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• من كمال عدله تعالى وتمام رحمته أنه لا يظلم عباده شيئًا مهما كان قليلًا، ويتفضل عليهم بمضاعفة حسناتهم.
1. அல்லாஹ்வின் பரிபூரண நீதி மற்றும் கருணையின் காரணமாகவே தன் அடியார்களுக்கு சிறிதும் அநீதி இழைப்பதில்லை. மாறாக அவர்களுக்குப் பன்மடங்கு நன்மைகளை வழங்கி அருள்புரிகிறான். info

• من شدة هول يوم القيامة وعظم ما ينتظر الكافر يتمنى أن يكون ترابًا.
2. மறுமை நாளின் திகில் மற்றும் நிராகரிப்பாளனை எதிர்பார்த்திருக்கும் பெரும் தண்டைனைகளின் காரணமாக அவன் தான் மண்ணோடு மண்ணாக ஆகிவிடக்கூடாதா என்று ஆசைகொள்வான். info

• الجنابة تمنع من الصلاة والبقاء في المسجد، ولا بأس من المرور به دون مُكْث فيه.
3. குளிப்பு அவசியமான நிலையில் இருப்பவர் தொழுவதோ பள்ளிவாயிலில் தங்குவதோ கூடாது. அதனைக் கடந்து செல்வது அனுமதிக்கப்பட்டது. info

• تيسير الله على عباده بمشروعية التيمم عند فقد الماء أو عدم القدرة على استعماله.
4. தண்ணீர் கிடைக்காதபோது அல்லது அதனைப் பயன்படுத்த முடியாதபோது மண்ணைப் பயன்படுத்தலாம் என்ற சட்டத்தின் மூலம் அல்லாஹ் தன் அடியார்கள் மீது எளிதாக்கியுள்ளான். info