Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
64 : 3

قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ تَعَالَوْا اِلٰی كَلِمَةٍ سَوَآءٍ بَیْنَنَا وَبَیْنَكُمْ اَلَّا نَعْبُدَ اِلَّا اللّٰهَ وَلَا نُشْرِكَ بِهٖ شَیْـًٔا وَّلَا یَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ ؕ— فَاِنْ تَوَلَّوْا فَقُوْلُوا اشْهَدُوْا بِاَنَّا مُسْلِمُوْنَ ۟

3.64. தூதரே! நீர் கூறுவீராக: “வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களே! வாருங்கள், நாம் அனைவரும் ஒன்றுபடும் பொது வார்த்தையில் நாம் ஒன்றிணைவோம்: “நாம் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனுடன் வேறு யாரையும் வணங்கக் கூடாது, அவர்கள் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்களாக இருந்தாலும் சரியே. நம்மில் சிலர் சிலரை அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படும் கட்டுப்படத்தக்க கடவுள்களாக ஆக்கிவிடக்கூடாது.” என்பதே அந்த வார்த்தையாகும். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அழைக்கும் சத்தியத்தை அவர்கள் புறக்கணித்துவிட்டால் “நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே கட்டுப்பட்ட முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என அவர்களிடம் நீங்கள் கூறுங்கள். info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• أن الرسالات الإلهية كلها اتفقت على كلمة عدل واحدة، وهي: توحيد الله تعالى والنهي عن الشرك.
1. அனைத்து இறைத்தூதுகளும் ஒருபொது விடயத்தில் உடன்பட்டுள்ளன. அது தான், அல்லாஹ் ஒருவனே அவனுக்கு இணையாக யாரையும் ஆக்கிவிடக்கூடாது என்பதாகும். info

• أهمية العلم بالتاريخ؛ لأنه قد يكون من الحجج القوية التي تُرَدُّ بها دعوى المبطلين.
2. வரலாறை அறிந்துவைத்திருப்பது முக்கியமானதாகும். சில வேளை அது அசத்தியவாதிகளின் வாதங்களை முறியடிப்பதற்கான வலிமையான ஆதாரமாக அமையலாம். info

• أحق الناس بإبراهيم عليه السلام من كان على ملته وعقيدته، وأما مجرد دعوى الانتساب إليه مع مخالفته فلا تنفع.
3. மக்களில் இப்ராஹீமின் மார்க்கத்தையும் கொள்கையையும் பின்பற்றுபவர்கள்தாம் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவருக்கு மாற்றம்செய்துகொண்டு நாங்கள் அவரைச் சார்ந்தவர்கள் என்று கூறுவதால் மாத்திரம் எந்தப் பயனும் இல்லை. info

• دَلَّتِ الآيات على حرص كفرة أهل الكتاب على إضلال المؤمنين من هذه الأمة حسدًا من عند أنفسهم.
4. வேதக்காரர்கள் நம்பிக்கைகொண்ட இந்த சமூகத்தின் மீதுள்ள பொறாமையினால் அவர்களை வழிகெடுக்க விரும்புகிறார்கள் என்பதை இவ்வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. info