Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
25 : 29

وَقَالَ اِنَّمَا اتَّخَذْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا ۙ— مَّوَدَّةَ بَیْنِكُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۚ— ثُمَّ یَوْمَ الْقِیٰمَةِ یَكْفُرُ بَعْضُكُمْ بِبَعْضٍ وَّیَلْعَنُ بَعْضُكُمْ بَعْضًا ؗ— وَّمَاْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟ۗۖ

29.25. இப்ராஹீம் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நீங்கள் சிலைகளை வணங்கும் தெய்வங்களாக எடுத்திருப்பது, உலக வாழ்வில் அவற்றை வணங்குவதில் உள்ள பற்று மற்றும் பழக்கத்தினால்தான். பின்னர் மறுமை நாளில் உங்களிடையேயுள்ள பற்று அறுபட்டுப்போகும். வேதனையைக் காணும்போது உங்களில் ஒருவர் மற்றவரை விட்டும் விலகிவிடுவார். ஒருவரையொருவர் சபிப்பார்கள். உங்களின் இருப்பிடம் நரகமாகும். அல்லாஹ்வின் வேதனையிலிருந்து உங்களைப் தடுக்கக்கூடிய உதவியாளர்கள் யாரும் உங்களுக்கு இருக்க மாட்டார்கள். நீங்கள் வணங்கிய சிலைகளாலோ, மற்றவர்களாலோ உங்களுக்கு உதவ முடியாது. info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• عناية الله بعباده الصالحين حيث ينجيهم من مكر أعدائهم.
1. அல்லாஹ் தன் நல்லடியார்களின் மீது கொண்ட அக்கறையினால் அவன் அவர்களை எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாக்கிறான். info

• فضل الهجرة إلى الله.
2. அல்லாஹ்வின்பால் புலம்பெயர்ந்து செல்வதன் சிறப்பு தெளிவாகிறது. info

• عظم منزلة إبراهيم وآله عند الله تعالى.
3. இப்ராஹீமும் அவரது குடும்பத்தினரும் அல்லாஹ்விடம் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளார்கள். info

• تعجيل بعض الأجر في الدنيا لا يعني نقص الثواب في الآخرة.
4. உலகில் சில நன்மைகள் அவசரமாகக் கிடைப்பதன் கருத்து மறுமையில் நன்மை குறையும் என்பதல்ல. info

• قبح تعاطي المنكرات في المجالس العامة.
5. பொதுச் சபைகளில் மானக் கேடான செயல்களில் ஈடுபடுவது மோசமானதாகும். info