Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
94 : 2

قُلْ اِنْ كَانَتْ لَكُمُ الدَّارُ الْاٰخِرَةُ عِنْدَ اللّٰهِ خَالِصَةً مِّنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

2.94. தூதரே! நீர் கூறும்: யூதர்களே, மறுமையில் சுவனம் உங்களுக்கு மட்டுமே உரித்தானது, மற்ற மக்கள் யாரும் அதில் நுழைய முடியாது என்ற உங்களது வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இந்த அந்தஸ்தை விரைவாகப் பெறுவதற்காக மரணத்தை விரும்பித் தேடிச்செல்லுங்கள்; கஷ்டம்நிறைந்த இவ்வுலகின் சுமைகளிலிருந்து விடுபட்டுவிடுங்கள். info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• المؤمن الحق يرجو ما عند الله من النعيم المقيم، ولهذا يفرح بلقاء الله ولا يخشى الموت.
1. உண்மையான நம்பிக்கையாளன் அல்லாஹ்விடம் கிடைக்கும் நிலையான அருட்கொடைகளை எதிர்பார்க்கிறான். எனவே அவன் அல்லாஹ்வை சந்திப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறான்; மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. info

• حِرص اليهود على الحياة الدنيا حتى لو كانت حياة حقيرة مهينة غير كريمة.
2. யூதர்கள் இவ்வுலக வாழ்க்கையின்மீது அதிக பற்றுடையவர்கள், அது எவ்வளவுதான் இழிவானதாக, மோசமானதாக இருந்தாலும் சரியே. info

• أنّ من عادى أولياء الله المقربين منه فقد عادى الله تعالى.
3. அல்லாஹ்வின் நெருங்கிய நேசர்களை பகைப்பவன் அல்லாஹ்வை பகைக்கிறான். info

• إعراض اليهود عن نبوة محمد صلى الله عليه وسلم بعدما عرفوا تصديقه لما في أيديهم من التوراة.
4. தங்களிடமுள்ள தவ்ராத் வேதத்தை முஹம்மது (ஸல்) அவர்கள் உண்மைப்படுத்துவதை யூதர்கள் நன்கறிந்த பின்னரும் அவரது தூதுத்துவத்தை மறுத்தார்கள். info

• أنَّ من لم ينتفع بعلمه صح أن يوصف بالجهل؛ لأنه شابه الجاهل في جهله.
5. தாம் பெற்ற கல்வியால் பயனடையாதவர் அறியாத மூடரைப் போலாவார். ஏனெனில் அவன் மடமையில் மூடருக்கு ஒப்பானவன். info