Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
27 : 14

یُثَبِّتُ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا بِالْقَوْلِ الثَّابِتِ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَفِی الْاٰخِرَةِ ۚ— وَیُضِلُّ اللّٰهُ الظّٰلِمِیْنَ ۙ۫— وَیَفْعَلُ اللّٰهُ مَا یَشَآءُ ۟۠

14.27. நிலையான ஏகத்துவ வார்த்தையை இவ்வுலகில் பூரணமாக நம்பிக்கை கொண்ட முஃமீன்களுக்கு அவர்கள் நம்பிக்கையுடன் மரணிக்கும் பொருட்டு உறுதியை வழங்குகிறான். அதேபோன்று மண்ணறை வாழ்விலும் மறுமை வாழ்விலும் அவர்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கிய அநியாயக்காரர்களை, அவனை நிராகரிப்பவர்களை அவன் நேரான பாதையை விட்டும் நெறிபிறழச் செய்து விடுகிறான். அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். தன் நீதியால் தான் நாடுபவர்களை வழிதவறச் செய்கிறான். தன் அருளால் தான் நாடுபவர்களுக்கு நேர்வழிகாட்டுகிறான். அவனை நிர்ப்பந்திக்கும் எவரும் இல்லை. info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• تشبيه كلمة الكفر بشجرة الحَنْظل الزاحفة، فهي لا ترتفع، ولا تنتج طيبًا، ولا تدوم.
1. நிராகரிப்பைத் தாங்கிய வார்த்தைக்கு படர்ந்து செல்லக்கூடிய கள்ளிச் செடி உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது. அது உயர்ந்து வளராது; நல்ல விளைச்சலைத் தராது; நீடித்து நிற்கவும் செய்யாது. info

• الرابط بين الأمر بالصلاة والزكاة مع ذكر الآخرة هو الإشعار بأنهما مما تكون به النجاة يومئذ.
2. மறுமையைக் குறிப்பிடுவதுடன் தொழுமாறும் ஸகாத் வழங்குமாறும் கட்டளையிட்டிருப்பதற்கு மத்தியிலுள்ள தொடர்பு அவையிரண்டின் மூலமே அந்நாளில் வெற்றி பெற முடியும் என்பதை உணர்த்துவதாகும். info

• تعداد بعض النعم العظيمة إشارة لعظم كفر بعض بني آدم وجحدهم نعمه سبحانه وتعالى .
3. சில மனிதர்கள் அல்லாஹ்வின் அருள்களுக்கு நன்றி செலுத்தாத தன்மையையும், மறுப்பையும் சுட்டிக்காட்டும் விதத்தில் குறிப்பிட்ட சில, பெரும் அருள்கள் எண்ணிக் கூறப்பட்டுள்ளன. info