அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு

அத்தகாஸுர்

சூராவின் இலக்குகளில் சில:
تذكير المتكاثرين واللاهين بالدنيا بالقبور والحساب.
உலகத்தை அதிகமாகத் தேடி அதில் மூழ்கியிருப்போருக்கு மண்ணறை மற்றும் கேள்வி கணக்கைக் கொண்டு ஞாபகமூட்டல் info

external-link copy
1 : 102

اَلْهٰىكُمُ التَّكَاثُرُ ۟ۙ

102.1. -மனிதர்களே!- செல்வங்களையும் குழந்தைகளையும் கொண்டு நீங்கள் ஒருவருக்கொருவர் பெருமையடிப்பது உங்களை அல்லாஹ்வுக்கு வழிபடுவதை விட்டும் திருப்பிவிட்டது. info
التفاسير:

external-link copy
2 : 102

حَتّٰی زُرْتُمُ الْمَقَابِرَ ۟ؕ

102.2. நீங்கள் மரணித்து மண்ணறையில் நுழையும் வரை. info
التفاسير:

external-link copy
3 : 102

كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ ۟ۙ

102.3. அவற்றைக் கொண்டு பெருமையடிப்பது அல்லாஹ்விற்குக் கட்டுப்படுவதை விட்டும் உங்களைத் திருப்பிவிடக் கூடாது. அதன் விளைவை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள். info
التفاسير:

external-link copy
4 : 102

ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ ۟ؕ

102.4. பின்னர் அதன் விளைவை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள். info
التفاسير:

external-link copy
5 : 102

كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْیَقِیْنِ ۟ؕ

102.5. நிச்சயமாக உங்களை அல்லாஹ் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி திட்டமாக உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்திருந்தால் செல்வங்களையும் குழந்தைகளையும் கொண்டு நீங்கள் பெருமைடிப்பதில் ஈடுபடமாட்டீர்கள். info
التفاسير:

external-link copy
6 : 102

لَتَرَوُنَّ الْجَحِیْمَ ۟ۙ

102.6. நிச்சயமாக மறுமை நாளில் நீங்கள் நரகத்தை காண்பீர்கள். info
التفاسير:

external-link copy
7 : 102

ثُمَّ لَتَرَوُنَّهَا عَیْنَ الْیَقِیْنِ ۟ۙ

102.7. பின்னர் அதனை எவ்வித சந்தேகமுமின்றி உறுதியாகக் காண்பீர்கள். info
التفاسير:

external-link copy
8 : 102

ثُمَّ لَتُسْـَٔلُنَّ یَوْمَىِٕذٍ عَنِ النَّعِیْمِ ۟۠

102.8. பின்னர் அந்த நாளில் அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த ஆரோக்கியம் செல்வம் இன்னபிற அருட்கொடைகளைக் குறித்து உங்களிடம் கேள்வி கேட்பான். info
التفاسير:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• خطر التفاخر والتباهي بالأموال والأولاد.
1. செல்வங்கள் மற்றும் குழந்தைகளைக் கொண்டு பெருமையடிப்பதால் ஏற்படும் விபரீதம். info

• القبر مكان زيارة سرعان ما ينتقل منه الناس إلى الدار الآخرة.
2. மண்ணறை சந்தித்துக்கொள்ளும் ஓர் இடமாகும். மனிதர்கள் விரைவாக அதிலிருந்து மறுமை வீட்டுக்கு சென்றுவிடுவார்கள். info

• يوم القيامة يُسْأل الناس عن النعيم الذي أنعم به الله عليهم في الدنيا.
3. மறுமை நாளில் மக்கள் உலகில் அல்லாஹ்வால் தங்களுக்கு அளிக்கப்பட்ட அருட்கொடைகளைக் குறித்து விசாரிக்கப்படுவார்கள். info

• الإنسان مجبول على حب المال.
4. மனிதன் பணத்தை நேசிக்கும் இயல்புள்ளவன். info