د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
95 : 7

ثُمَّ بَدَّلْنَا مَكَانَ السَّیِّئَةِ الْحَسَنَةَ حَتّٰی عَفَوْا وَّقَالُوْا قَدْ مَسَّ اٰبَآءَنَا الضَّرَّآءُ وَالسَّرَّآءُ فَاَخَذْنٰهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟

7.95. பின்னர் கஷ்டம் நோய் ஆகியவற்றைக் கொண்டு அவர்களைத் தண்டித்த பிறகு அவர்களுக்கு நன்மையையும், விசாலத்தையையும், அமைதியையும் வழங்குகிறோம். எந்த அளவுக்கெனில் அவர்களும் பல்கிப் பெருகி அவர்களது சொத்துக்களும் அதிகரித்துவிடுகின்றன. அவர்கள் கூறுகிறார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட இன்பங்களும் துன்பங்களும் நமது முன்னோர்களுக்கு இதற்கு முன் நிகழ்ந்த ஒரு வழமையான நிகழ்வுதான்.” தங்களுக்குக் கிடைத்த தண்டனையின் மூலம் படிப்பினையே நாடப்பட்டது என்பதையும் வழங்கப்பட்ட அருட்கொடையின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இறைவன் பிடிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லை. அவர்கள் வேதனையை உணராமலும் அதனை எதிர்பார்க்காமலும் இருந்த சமயத்தில் திடீரென வேதனையால் நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம். info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• من مظاهر إكرام الله لعباده الصالحين أنه فتح لهم أبواب العلم ببيان الحق من الباطل، وبنجاة المؤمنين، وعقاب الكافرين.
1. அல்லாஹ் தன் நல்லடியார்களுக்கு வழங்கியுள்ள கண்ணியத்தின் வெளிப்பாடு, அசத்தியத்திலிருந்து சத்தியத்தை தெளிவாக்கியும், நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றியும், நிராகரிப்பாளர்களுக்குத் தண்டனை அளித்தும், கல்வியின் வாயில்களை அவர்களுக்குத் திறந்து வைத்துள்ளான். info

• من سُنَّة الله في عباده الإمهال؛ لكي يتعظوا بالأحداث، ويُقْلِعوا عما هم عليه من معاص وموبقات.
2. அடியார்கள் நிகழ்வுகளைக் கொண்டு படிப்பினை பெற வேண்டும் என்பதற்காகவும், பாவங்களையும் அழிவில் தள்ளிவிடக்கூடியவற்றையும் விட்டுவிட வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்கு அவகாசம் அளிப்பது அல்லாஹ்வின் வழிமுறையாகும். info

• الابتلاء بالشدة قد يصبر عليه الكثيرون، ويحتمل مشقاته الكثيرون، أما الابتلاء بالرخاء فالذين يصبرون عليه قليلون.
3. கஷ்டங்களால் ஏற்படும் சோதனைகளை பெரும்பாலோர் சில வேளை பொறுமையுடன் எதிர்கொண்டு விடுகிறார்கள். அதன் சிரமங்களை அவர்கள் தாங்கிக்கொள்கின்றனர். அருட்கொடைகளால் ஏற்படும் சோதனைகளை குறைவானவர்களே பொறுமையுடன் எதிர்கொள்கிறார்கள். info