د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

د مخ نمبر:close

external-link copy
22 : 39

اَفَمَنْ شَرَحَ اللّٰهُ صَدْرَهٗ لِلْاِسْلَامِ فَهُوَ عَلٰی نُوْرٍ مِّنْ رَّبِّهٖ ؕ— فَوَیْلٌ لِّلْقٰسِیَةِ قُلُوْبُهُمْ مِّنْ ذِكْرِ اللّٰهِ ؕ— اُولٰٓىِٕكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

39.22. அல்லாஹ் யாருடைய உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவாக்கி அதன்பால் அவருக்கு வழிகாட்டியதனால் தம் இறைவனிடமிருந்து வந்துள்ள ஞானத்தின் மீது இருப்பவரும், அல்லாஹ்வின் நினைவை விட்டும் இறுகிய இதயத்தைப் பெற்றவரும் சமமாக மாட்டார்கள். வெற்றி நேர்வழி பெற்றவர்களுக்கே. இறை நினைவை விட்டும் இறுகிய இதயமுடையவர்கள் இழப்பையே பெறுவார்கள். அவர்கள் சத்தியத்தைவிட்டும் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றார்கள். info
التفاسير:

external-link copy
23 : 39

اَللّٰهُ نَزَّلَ اَحْسَنَ الْحَدِیْثِ كِتٰبًا مُّتَشَابِهًا مَّثَانِیَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُوْدُ الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ ۚ— ثُمَّ تَلِیْنُ جُلُوْدُهُمْ وَقُلُوْبُهُمْ اِلٰی ذِكْرِ اللّٰهِ ؕ— ذٰلِكَ هُدَی اللّٰهِ یَهْدِیْ بِهٖ مَنْ یَّشَآءُ ؕ— وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟

39.23. அல்லாஹ் தன் தூதர் முஹம்மது மீது மிகச்சிறந்த செய்தியான குர்ஆனை இறக்கியுள்ளான். அது உண்மையிலும் அழகிலும் ஒத்திசைவிலும் முரண்பாடின்மையிலும் ஒன்றையொன்று ஒத்திருக்கக்கூடியதாகும். சம்பவங்கள், சட்டங்கள், வாக்குறுதிகள், எச்சரிக்கைகள், சத்தியவாதிகளின் பண்புகள், அசத்தியவாதிகளின் பண்புகள் ஆகியவை அதில் திரும்பத்திரும்ப வந்துள்ளன. அதிலுள்ள எச்சரிக்கைகளைச் செவியுறும்போது தங்கள் இறைவனை அஞ்சக்கூடியவர்களின் தோல்கள் சிலிர்க்கின்றன. பின்னர் அதிலுள்ள சந்தோசங்கள், நற்செய்திகளை செவியுறும்போது அவர்களின் தோலும் உள்ளமும் இலகிவிடுகிறது. மேற்கூறப்பட்ட குர்ஆன் மற்றும் அதன் தாக்கம் என்பவை அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு வழி காட்டும் நேர்வழியாகும். அவன் யாரைக் கைவிட்டு, நேர்வழிபெற பாக்கியம் அளிக்கவில்லையோ அவருக்கு வேறு யாரும் வழிகாட்டுபவன் இருக்க முடியாது. info
التفاسير:

external-link copy
24 : 39

اَفَمَنْ یَّتَّقِیْ بِوَجْهِهٖ سُوْٓءَ الْعَذَابِ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— وَقِیْلَ لِلظّٰلِمِیْنَ ذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟

39.24. யாருக்கு அல்லாஹ் உலகில் நேர்வழிகாட்டி பாக்கியம் அளித்து மறுமையில் அவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வானோ அவரும் யார் நிராகரித்த நிலையிலேயே மரணித்து அல்லாஹ் அவரை கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் நரகத்தில் பிரவேசிக்கச் செய்துவிடுவானோ அவரும் சமமாவார்களா என்ன? முகங்குப்புற வீழ்ந்து கிடக்கும் அவர் தன் முகத்தால்தான் நரக நெருப்பைத் தடுக்க வேண்டும். நிராகரித்து, பாவங்கள் புரிந்து தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களிடம் இழிவாக கூறப்படும்: “நிராகரித்து, பாவங்கள் புரிந்து நீங்கள் சம்பாதித்த வேதனையை அனுபவியுங்கள். இதுதான் உங்களுக்கான கூலியாகும். info
التفاسير:

external-link copy
25 : 39

كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَاَتٰىهُمُ الْعَذَابُ مِنْ حَیْثُ لَا یَشْعُرُوْنَ ۟

39.25. இந்த இணைவைப்பாளர்களுக்கு முன்னர் வாழ்ந்த சமூகங்களும் பொய்ப்பித்தன. அவர்கள் வேதனையை உணர்ந்து பாவமன்னிப்புக்கு தயாராக முடியாதளவு திடீரென வேதனை அவர்களிடம் வந்தது. info
التفاسير:

external-link copy
26 : 39

فَاَذَاقَهُمُ اللّٰهُ الْخِزْیَ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۚ— وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ— لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟

39.26. அல்லாஹ் அதன் மூலம் இவ்வுலக வாழ்வில் அவர்களை இழிவுமிக்க வேதனையை அனுபவிக்கச் செய்தான். நிச்சயமாக அவர்களுக்காக காத்திருக்கும் மறுமையின் வேதனையோ மிகக் கடுமையானது. அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே! info
التفاسير:

external-link copy
27 : 39

وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِیْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ لَّعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟ۚ

39.27. நாம் முஹம்மதின் மீது இறக்கிய இந்த குர்ஆனில் அவர்கள் படிப்பினை பெறும் பொருட்டும் சத்தியத்தின்படி செயல்பட்டு அசத்தியத்தை விட்டுவிட வேண்டும் என்பதற்காகவும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் நம்பிக்கை கொள்வதற்கும் நிராகரிப்பதற்கும் நன்மைக்கும் தீமைக்கும் ஏனையவற்றுக்கும் பலவகையான உதாரணங்களை எடுத்துக் கூறியுள்ளோம். info
التفاسير:

external-link copy
28 : 39

قُرْاٰنًا عَرَبِیًّا غَیْرَ ذِیْ عِوَجٍ لَّعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟

39.28. அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்ச வேண்டும் என்பதற்காக இந்த குர்ஆனை எவ்விதக் கோணலும் களங்கமும் நெறிபிறலுமற்ற அரபி மொழியில் அருளியுள்ளோம். info
التفاسير:

external-link copy
29 : 39

ضَرَبَ اللّٰهُ مَثَلًا رَّجُلًا فِیْهِ شُرَكَآءُ مُتَشٰكِسُوْنَ وَرَجُلًا سَلَمًا لِّرَجُلٍ ؕ— هَلْ یَسْتَوِیٰنِ مَثَلًا ؕ— اَلْحَمْدُ لِلّٰهِ ۚ— بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۟

39.29. அல்லாஹ் இணைவைப்பாளனுக்கும் ஓரிறைக்கொள்கையைப் பின்பற்றுபவனுக்கும் ஒரு உதாரணம் கூறுகிறான். அடிமையான ஒரு மனிதனுக்கு பல பங்காளிகள் உரிமையாளர்களாக இருக்கின்றார்கள். அவன் அவர்களில் சிலரை திருப்திப்படுத்தினால் சிலர் கோபமடைகிறார்கள். எனவே அவன் தடுமாற்றத்திலும் குழப்பத்திலும் இருக்கின்றான். இன்னொரு மனிதனுக்கு ஒரேயொரு மனிதன் மட்டுமே உரிமையாளனாக இருக்கின்றான். அந்த மனிதன் தன் எஜமானனின் நோக்கத்தை அறிகிறான். எனவே அவன் நிம்மதியாகவும் மனஅமைதி பெற்ற நிலையிலும் இருக்கின்றான். இந்த இரு மனிதர்களும் சமமாக மாட்டார்கள். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. மாறாக அவர்களில் பெரும்பாலானோர் அறிந்துகொள்ளமாட்டார்கள். அதனால் அல்லாஹ்வோடு மற்றவர்களை இணையாக ஆக்குகிறார்கள். info
التفاسير:

external-link copy
30 : 39

اِنَّكَ مَیِّتٌ وَّاِنَّهُمْ مَّیِّتُوْنَ ۟ؗ

39.30. -தூதரே!- நிச்சயமாக நீர் மரணிக்கக்கூடியவர்தான். நிச்சயமாக அவர்களும் சந்தேகம் இல்லாமல் மரணிக்கக்கூடியவர்கள்தாம். info
التفاسير:

external-link copy
31 : 39

ثُمَّ اِنَّكُمْ یَوْمَ الْقِیٰمَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُوْنَ ۟۠

39.31. பின்னர் -மனிதர்களே!- நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் நீங்கள் கருத்துவேற்றுமை கொண்டவற்றில் உங்கள் இறைவனிடத்தில் தர்க்கம் செய்துகொண்டிருப்பீர்கள். அப்போது அசத்தியவாதிகளில் சத்தியவாதிகள் யார் என்பது தெளிவாகிவிடும். info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• أهل الإيمان والتقوى هم الذين يخشعون لسماع القرآن، وأهل المعاصي والخذلان هم الذين لا ينتفعون به.
1. ஈமான் மற்றும் தக்வா உடையவர்களே குர்ஆனைச் செவியுற்று இறைவனை அஞ்சுகிறார்கள். பாவிகளும் கைவிடப்பட்டவர்களும் அதனைக் கொண்டு பயனடைவதில்லை. info

• التكذيب بما جاءت به الرسل سبب نزول العذاب إما في الدنيا أو الآخرة أو فيهما معًا.
2.தூதர்கள் கொண்டுவந்ததை பொய்ப்பிப்பது இவ்வுலகில் அல்லது மறுமையில் அல்லது ஈருலகிலும் தண்டனை இறங்குவதற்குக் காரணமாகும். info

• لم يترك القرآن شيئًا من أمر الدنيا والآخرة إلا بيَّنه، إما إجمالًا أو تفصيلًا، وضرب له الأمثال.
3. இவ்வுலக, மறுவுலக காரியங்களில் எதனையும் சுருக்கமாகவோ அல்லது விரிவாகவோ தெளிவுபடுத்தாமல் எந்தவொரு விடயத்தையும் அல்குர்ஆன் விடவில்லை. அதற்கு உதாரணங்களையும் கூறியுள்ளது. info