د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
42 : 13

وَقَدْ مَكَرَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَلِلّٰهِ الْمَكْرُ جَمِیْعًا ؕ— یَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ ؕ— وَسَیَعْلَمُ الْكُفّٰرُ لِمَنْ عُقْبَی الدَّارِ ۟

13.42. முந்தைய சமூக மக்களும் தங்களின் தூதர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் கொண்டு வந்ததை நிராகரித்தார்கள். தூதர்களுக்கு அவர்கள் செய்த சதியினால் என்ன சாதித்தார்கள்? ஒன்றுமேயில்லை. ஏனெனில் அல்லாஹ்வின் திட்டங்கள் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்த வல்லது. அனைத்து படைப்பினங்களின் செயல்களையும் அவன் அறிந்து வைத்துள்ளான். அவற்றில் எதுவும் அவனை விட்டும் மறையமுடியாது. அச்சமயத்தில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாமலிருந்ததனால் தாம் எவ்வளவு பெரும் தவறிழைத்தவர்கள், நம்பிக்கையாளர்கள் எவ்வளவு சரியானவர்களாக இருந்து சுவனத்தையும் நல்ல முடிவையும் கூலியாகப் பெற்றுள்ளார்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• الترغيب في الجنة ببيان صفتها، من جريان الأنهار وديمومة الرزق والظل.
1. நதிகள் ஓடுதல், நிலையான வாழ்வாதாரம், நிழல் ஆகிய வர்ணனைகள் கூறப்பட்டு சுவனத்தை ஆர்வமூட்டப்பட்டுள்ளது. info

• خطورة اتباع الهوى بعد ورود العلم وأنه من أسباب عذاب الله.
2. அறிந்த பின்னரும் மன இச்சையைப் பின்பற்றுவது பாரதூரமானது. அல்லாஹ்வின் வேதனைக்கான காரணிகளில் ஒன்றாகும். info

• بيان أن الرسل بشر، لهم أزواج وذريات، وأن نبينا صلى الله عليه وسلم ليس بدعًا بينهم، فقد كان مماثلًا لهم في ذلك.
3. தூதர்கள் மனிதர்களாகத்தான் இருந்தார்கள். அவர்களுக்கு மனைவியரும் பிள்ளைகளும் இருந்தார்கள். நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அவர்களில் புதுமையானவர் அல்ல. அந்த விடயத்தில் முன்சென்ற தூதர்களைப் போலவே இருந்தார்கள். என்ற விடயம் தெளிவாக்கப்பட்டுள்ளது. info