ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫

external-link copy
261 : 2

مَثَلُ الَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِیْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ؕ— وَاللّٰهُ یُضٰعِفُ لِمَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟

2.261. தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்யும் நம்பிக்கையாளர்களின் நன்மைக்கு உதாரணம், ஒரு விதையைப் போன்றதாகும். விவசாயி அதனை நல்ல பூமியில் விதைக்கிறான். அது ஏழு கதிர்களை விளைவிக்கிறது. ஒவ்வொரு கதிரும் நூறு விதைகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. அல்லாஹ் தான் நாடிய அடியார்களுக்கு நன்மைகளை கணக்கின்றி, பன்மடங்காக வழங்குகிறான். அல்லாஹ் தாராளமாக வழங்கக்கூடியவன். அதற்குத் தகுதியானவர்களை நன்கறிந்தவன். info
التفاسير:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• مراتب الإيمان بالله ومنازل اليقين به متفاوتة لا حد لها، وكلما ازداد العبد نظرًا في آيات الله الشرعية والكونية زاد إيمانًا ويقينًا.
1. அல்லாஹ்வின்மீது கொண்ட ஈமானின் படித்தரங்கள் ஏற்றத்தாழ்வானவை. அவற்றிற்கு எல்லையே கிடையாது. அல்லாஹ்வின் சட்டவசனங்களிலும், பிரபஞ்ச அத்தாட்சிகளிலும் அடியான் கவனம் செலுத்த, செலுத்த அவனுடைய ஈமானும் உறுதியும் அதிகரித்துக் கொண்டே செல்லும். info

• بَعْثُ الله تعالى للخلق بعد موتهم دليل ظاهر على كمال قدرته وتمام عظمته سبحانه.
2. அல்லாஹ் படைப்புகளை அவை மரணித்த பின்னரும் உயிர்த்தெழச்செய்வது அவனுடைய பரிபூரணமான ஆற்றல் மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். info

• فضل الإنفاق في سبيل الله وعظم ثوابه، إذا صاحبته النية الصالحة، ولم يلحقه أذى ولا مِنّة محبطة للعمل.
3. தூய எண்ணத்துடன் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் தர்மம் ஏராளமான நன்மைகளையும் சிறப்புகளையும் உள்ளடக்கியது.அதனுடன் தொல்லையும் நன்மையைப் போக்கிவிடும் சொல்லிக்காட்டுதலும் இருக்கக்கூடாது. info

• من أحسن ما يقدمه المرء للناس حُسن الخلق من قول وفعل حَسَن، وعفو عن مسيء.
4. ஒரு மனிதன் மக்களுக்கு வழங்குபவற்றில் மிகச்சிறந்தது நற்குணமிக்க சொல்லும் செயலும் தவறிழைத்தவனை மன்னிப்பதுமாகும். info