വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം)

external-link copy
69 : 7

اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰی رَجُلٍ مِّنْكُمْ لِیُنْذِرَكُمْ ؕ— وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ بَعْدِ قَوْمِ نُوْحٍ وَّزَادَكُمْ فِی الْخَلْقِ بَصْۜطَةً ۚ— فَاذْكُرُوْۤا اٰلَآءَ اللّٰهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟

7.69. வானவர் இனத்தையோ ஜின் இனத்தையோ சாராத உங்கள் இனத்தைச் சார்ந்த ஒரு மனிதர் வாயிலாக உங்களை எச்சரிப்பதற்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வந்துள்ளது உங்களை ஆச்சரியமூட்டுகிறதா? பூமியில் வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தியதற்கும், தமது நிராகரிப்பினால் அழிந்துபோன நூஹ் நபியின் சமூகத்திற்குப் பிறகு உங்களை வழித்தோன்றல்களாக ஆக்கியதற்கும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து, அவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்களுக்கு உடல் பலத்தையும் வலிமையையும் வழங்கியதற்காக அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துங்கள். நீங்கள் வெறுக்கும் விஷயத்திலிருந்து தப்பித்து விரும்பியதைப் பெற்று வெற்றி பெறும்பொருட்டு அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த விசாலமான அருட்கொடைகளை நினைவுகூருங்கள். info
التفاسير:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• ينبغي التّحلّي بالصبر في الدعوة إلى الله تأسيًا بالأنبياء عليهم السلام.
1. இறைத் தூதர்களைப் பின்பற்றி அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் பணியில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். info

• من أولويات الدعوة إلى الله الدعوة إلى عبادة الله وحده لا شريك له، ورفض الإشراك به ونبذه.
2. இணையோ துணையோ அற்ற அல்லாஹ்வை மாத்திரமே வணங்குவதற்கும், அவனுக்கு இணைவைப்பதை மறுத்துரைப்பதன் பக்கமும் அழைப்பதற்கே அழைப்புப் பணியில் முதலில் முன்னுரிமை தரப்பட வேண்டும். info

• الاغترار بالقوة المادية والجسدية يصرف صاحبها عن الاستجابة لأوامر الله ونواهيه.
3. உடல் பலம் பொருளாதார பலம் ஆகியவற்றைக் கொண்டு மயங்குவது அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களுக்குப் பதிலளிப்பதிலிருந்து மனிதனைத் திசை திருப்பிவிடுகின்றன. info

• النبي يكون من جنس قومه، لكنه من أشرفهم نسبًا، وأفضلهم حسبًا، وأكرمهم مَعْشرًا، وأرفعهم خُلُقًا.
4. தூதர் அந்த சமூக மக்களின் இனத்திலிருந்தே வருவார். ஆனால் அவர் சிறந்த குடும்பத்தைச் சார்ந்தவராகவும் நற்பெயர் மிக்கவர்களில் உள்ளவராகவும் கண்ணியமானவராகவும் உயர்ந்த ஒழுக்கங்களைப் பெற்றவராகவும் இருப்பார். info

• الأنبياء وورثتهم يقابلون السّفهاء بالحِلم، ويغضُّون عن قول السّوء بالصّفح والعفو والمغفرة.
5. இறைத் தூதர்களும் அவர்களின் வாரிசுகளும் மூடர்களை பொறுமையால் எதிர்கொள்கிறார்கள். தீய வார்த்தையை கண்டும் காணாமல் மன்னித்தும் மறைத்தும் புறக்கணித்துவிடுகிறார்கள். info