വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം)

external-link copy
5 : 59

مَا قَطَعْتُمْ مِّنْ لِّیْنَةٍ اَوْ تَرَكْتُمُوْهَا قَآىِٕمَةً عَلٰۤی اُصُوْلِهَا فَبِاِذْنِ اللّٰهِ وَلِیُخْزِیَ الْفٰسِقِیْنَ ۟

59.5. -நம்பிக்கையாளர்களே!- பனூ நளீர் குலத்தாருடன் போரிடும்போது அல்லாஹ்வின் எதிரிகளை கோபமூட்டுவதற்காக நீங்கள் வெட்டிய பேரீச்சை மரங்களும் அல்லது அதனைக்கொண்டு பயனடைவதற்காக அவற்றின் வேர்களில் நிற்கும்படி அவற்றை விட்டுவிட்டதும் அல்லாஹ்வின் கட்டளையினால்தான். அவர்கள் எண்ணுவது போல இது பூமியில் குழப்பம் விளைவித்தல் ஆகாது. இதன் மூலம் அல்லாஹ் தனக்குக் கட்டுப்படாமல் ஒப்பந்தங்களை முறித்து அதனை நிறைவேற்றும் வழிகளை விட்டுவிட்டு துரோகமிழைக்கும் வழியை தேர்ந்தெடுத்துக் கொண்ட யூதர்களை இழிவுபடுத்துகிறான். info
التفاسير:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• فعل ما يُظنُّ أنه مفسدة لتحقيق مصلحة عظمى لا يدخل في باب الفساد في الأرض.
1. பெரும் நலவொன்றை அடைவதற்கு தீயகாரியமெனக் கருதப்படும் ஒரு விடயத்தைச் செய்வது பூமியில் குழப்பம் விளைவிக்கும் விடயங்களில் சேரமாட்டாது. info

• من محاسن الإسلام مراعاة ذي الحاجة للمال، فَصَرَفَ الفيء لهم دون الأغنياء المكتفين بما عندهم.
2. பணத் தேவையுள்ளோரைக் கவனத்தில் கொள்வது இஸ்லாத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அதனால்தான் போரின்றி கிடைத்த செல்வங்களை போதுமானளவு சொத்தைப் பெற்றுள்ள பணக்காரர்களுக்கு வழங்காமல் அவர்களுக்கு வழங்கியுள்ளது. info

• الإيثار منقبة عظيمة من مناقب الإسلام ظهرت في الأنصار أحسن ظهور.
3. பிறரை முற்படுத்தும் பண்பு இஸ்லாம் சிறப்பித்த பெரும் சிறப்புக்குரிய ஒரு காரியமாகும். அன்சாரிகளிடம் அது மிகத்தெளிவாக அது வெளிப்பட்டது. info