വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം)

external-link copy
42 : 18

وَاُحِیْطَ بِثَمَرِهٖ فَاَصْبَحَ یُقَلِّبُ كَفَّیْهِ عَلٰی مَاۤ اَنْفَقَ فِیْهَا وَهِیَ خَاوِیَةٌ عَلٰی عُرُوْشِهَا وَیَقُوْلُ یٰلَیْتَنِیْ لَمْ اُشْرِكْ بِرَبِّیْۤ اَحَدًا ۟

18.42. விசுவாசியின் எதிர்பார்ப்பு நிறைவேறியது. நிராகரிப்பாளனின் தோட்டத்தின் பழங்களை அழிவு சூழ்ந்துகொண்டது. அதனைக் கண்ட அவன் அதனைப் பராமரிப்பதற்காக செலவிட்டதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டு கைபிசைந்து நின்றான். திராட்சை மரத்தின் கிளைகள் அழிந்து அத்தோட்டம் அடியோடு வீழ்ந்து கிடந்தது. அவன் கூறினான்: “நான் என் இறைவனை மட்டுமே நம்பிக்கைகொண்டிருக்க வேண்டுமே! வணக்கத்தில் அவனுக்கு எதையும் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே! info
التفاسير:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• على المؤمن ألا يستكين أمام عزة الغني الكافر، وعليه نصحه وإرشاده إلى الإيمان بالله، والإقرار بوحدانيته، وشكر نعمه وأفضاله عليه.
1. நம்பிக்கையாளன் நிராகரித்த செல்வந்தனின் பணத்திமிருக்கு முன்னால் அடங்கிச் செல்லக்கூடாது. அவனுக்கு அறிவுரை வழங்கி அல்லாஹ்வை நம்பி அவனது ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டு, அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவதன் பக்கம் அவனை அழைக்க வேண்டும். info

• ينبغي لكل من أعجبه شيء من ماله أو ولده أن يضيف النعمة إلى مُولِيها ومُسْدِيها بأن يقول: ﴿ما شاءَ اللهُ لا قُوَّةَ إلَّا بِاللهِ﴾.
2. யாருக்காவது தனது சொத்து மற்றும் பிள்ளைச் செல்வங்களின் மூலம் பூரிப்பு ஏற்பட்டால் உடனே அவர்கள், “அல்லாஹ் நாடியதே கிடைத்துள்ளது. அவனைத்தவிர வேறு எவருக்கும் எந்த சக்தியும் இல்லை” என்று கூறி அருட்கொடையாளனின்பால் அவற்றை இணைத்துவிட வேண்டும். info

• إذا أراد الله بعبد خيرًا عجل له العقوبة في الدنيا.
3. அல்லாஹ் ஒரு அடியாருக்கு நன்மையை நாடினால் அவருக்கு இவ்வுலகிலேயே தண்டனை வழங்கிவிடுகிறான். info

• جواز الدعاء بتلف مال من كان ماله سبب طغيانه وكفره وخسرانه.
4. ஒருவரின் செல்வம் அவருடைய நிராகரிப்புக்கும், வரம்புமீறலுக்கும், அழிவுக்கும் காரணமாக அமைந்தால் அவரது சொத்தை அழிக்குமாறு பிரார்த்தனை செய்யலாம். info