ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

external-link copy
71 : 10

وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ نُوْحٍ ۘ— اِذْ قَالَ لِقَوْمِهٖ یٰقَوْمِ اِنْ كَانَ كَبُرَ عَلَیْكُمْ مَّقَامِیْ وَتَذْكِیْرِیْ بِاٰیٰتِ اللّٰهِ فَعَلَی اللّٰهِ تَوَكَّلْتُ فَاَجْمِعُوْۤا اَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا یَكُنْ اَمْرُكُمْ عَلَیْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوْۤا اِلَیَّ وَلَا تُنْظِرُوْنِ ۟

(நபியே!) நூஹ் உடைய சரித்திரத்தை அவர்களுக்கு ஓதி காண்பிப்பீராக! அவர் தன் சமுதாயத்தை நோக்கி, “என் சமுதாயமே! (உங்களுடன்) நான் தங்கி இருப்பதும், அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு (உங்களுக்கு) நான் உபதேசிப்பதும் உங்கள் மீது பாரமாக இருந்தால், நான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து (அவனை சார்ந்து) விட்டேன். ஆகவே, உங்கள் (விருப்பப்படி) காரியத்தை முடிவு செய்யுங்கள்; இன்னும், (நீங்கள் இணை வைத்து வணங்கிய) உங்கள் தெய்வங்களையும் (அழைத்துக் கொள்ளுங்கள்). பிறகு, உங்கள் காரியம் உங்களுக்கு மறைவானதாக குழப்பமானதாக ஆகிவிட வேண்டாம். பிறகு, என் மீது (அம்முடிவை) நிறைவேற்றுங்கள். இன்னும், (அதில்) நீங்கள் எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று (நூஹ்) கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக. info
التفاسير: