ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន

លេខ​ទំព័រ:close

external-link copy
5 : 83

لِیَوْمٍ عَظِیْمٍ ۟ۙ

83.5. பயங்கரங்களையும் சோதனைகளையும் உள்ளடக்கிய அந்த மாபெரும் நாளில் விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும். info
التفاسير:

external-link copy
6 : 83

یَّوْمَ یَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ

83.6. அந்நாளில் மக்கள் அனைவரும் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனுக்கு முன்னால் விசாரணைக்காக நிற்பார்கள். info
التفاسير:

external-link copy
7 : 83

كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْفُجَّارِ لَفِیْ سِجِّیْنٍ ۟ؕ

83.7. மரணித்தவர்கள் எழுப்பப்பட மாட்டார்கள் என்று நீங்கள் எண்ணுவது போலல்ல விடயம். நிச்சயமாக நிராகரிப்பாளர்கள், முனாபிக்குகளான பாவிகளின் பதிவேடு பூமியின் அடியில் நஷ்டமடைந்ததாக இருக்கும். info
التفاسير:

external-link copy
8 : 83

وَمَاۤ اَدْرٰىكَ مَا سِجِّیْنٌ ۟ؕ

83.8. -தூதரே!- ஸிஜ்ஜீன் என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? info
التفاسير:

external-link copy
9 : 83

كِتٰبٌ مَّرْقُوْمٌ ۟ؕ

83.9. நிச்சயமாக அது நீங்காத வகையில் பதிவுசெய்யப்பட்ட புத்தகமாகும். அதில் கூடுதலோ, குறைவோ இடம்பெறாது. info
التفاسير:

external-link copy
10 : 83

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟ۙ

83.10. அந்நாளில் பொய்யாக்குபவர்களுக்கு அழிவும் இழப்புமே உண்டாகும். info
التفاسير:

external-link copy
11 : 83

الَّذِیْنَ یُكَذِّبُوْنَ بِیَوْمِ الدِّیْنِ ۟ؕ

83.11. உலகில் தன் அடியார்கள் செய்த செயல்களுக்கு அல்லாஹ் கூலி வழங்கும் நாளை அவர்கள் மறுக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
12 : 83

وَمَا یُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعْتَدٍ اَثِیْمٍ ۟ۙ

83.12. அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடிய, அதிகம் பாவம் செய்யக்கூடிய ஒவ்வொருவருமே அந்த நாளை பொய்ப்பிக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
13 : 83

اِذَا تُتْلٰی عَلَیْهِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟ؕ

83.13. அவனிடம் நம் தூதர்மீது இறக்கப்பட்ட நம் வசனங்கள் எடுத்துரைக்கப்பட்டால் “இவை முந்தைய சமூகங்களின் கட்டுக் கதைகள். இவை அல்லாஹ்விடமிருந்து வந்தவையல்ல” என்று கூறுகிறான். info
التفاسير:

external-link copy
14 : 83

كَلَّا بَلْ ٚ— رَانَ عَلٰی قُلُوْبِهِمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟

83.14. இந்த நிராகரிப்பாளர்கள் எண்ணுவது போலல்ல விடயம். மாறாக அவர்கள் செய்த பாவங்கள் அவர்களின் அறிவை மூடிவிட்டது, மிகைத்துவிட்டது. எனவே அவர்களால் தங்களின் உள்ளங்களைக் கொண்டு சத்தியத்தை பார்க்கமுடியவில்லை. info
التفاسير:

external-link copy
15 : 83

كَلَّاۤ اِنَّهُمْ عَنْ رَّبِّهِمْ یَوْمَىِٕذٍ لَّمَحْجُوْبُوْنَ ۟ؕ

83.15. நிச்சயமாக அவர்கள் மறுமை நாளில் தங்கள் இறைவனைப் பார்ப்பதைவிட்டும் தடுக்கப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
16 : 83

ثُمَّ اِنَّهُمْ لَصَالُوا الْجَحِیْمِ ۟ؕ

83.16. பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகத்தில் நுழைந்து அதன் வெப்பத்தை அனுபவிப்பார்கள். info
التفاسير:

external-link copy
17 : 83

ثُمَّ یُقَالُ هٰذَا الَّذِیْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟ؕ

83.17. பின்னர் மறுமை நாளில் அவர்களிடம் கண்டிக்கும் விதமாகக் கூறப்படும்: “நீங்கள் அனுபவிக்கும் இந்த வேதனையைத்தான் உலகில் தூதர் உங்களிடம் கூறியபோது பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்கள்.” info
التفاسير:

external-link copy
18 : 83

كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْاَبْرَارِ لَفِیْ عِلِّیِّیْنَ ۟ؕ

83.18. கேள்வி கணக்கோ, கூலி வழங்குவதோ கிடையாது என்று நீங்கள் எண்ணுவது போலல்ல விடயம். நிச்சயமாக கீழ்ப்படிந்தவர்களின் பதிவேடு இல்லியூனில் இருக்கும். info
التفاسير:

external-link copy
19 : 83

وَمَاۤ اَدْرٰىكَ مَا عِلِّیُّوْنَ ۟ؕ

83.19. -தூதரே!- இல்லியூன் என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? info
التفاسير:

external-link copy
20 : 83

كِتٰبٌ مَّرْقُوْمٌ ۟ۙ

83.20. நிச்சயமாக அது நீங்காத வகையில் பதிவுசெய்யப்பட்ட புத்தகமாகும். அதில் கூடுதலோ, குறைவோ இடம்பெறாது. info
التفاسير:

external-link copy
21 : 83

یَّشْهَدُهُ الْمُقَرَّبُوْنَ ۟ؕ

83.21. ஒவ்வொரு வானத்திலுமுள்ள நெருக்கமான வானவர்கள் அந்த புத்தகத்தைக் கொண்டுவருவார்கள். info
التفاسير:

external-link copy
22 : 83

اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍ ۟ۙ

83.22. நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அதிகமாக கட்டுப்பட்டவர்கள் மறுமை நாளில் நிலையான அருட்கொடையில் இருப்பார்கள். info
التفاسير:

external-link copy
23 : 83

عَلَی الْاَرَآىِٕكِ یَنْظُرُوْنَ ۟ۙ

83.23. அலங்கரிக்கப்பட்ட கட்டில்களின் மீதமர்ந்து தங்கள் இறைவனின் பக்கமும் தங்கள் மனம் விரும்புவதன், சந்தோசப்படுவதன் பக்கமும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். info
التفاسير:

external-link copy
24 : 83

تَعْرِفُ فِیْ وُجُوْهِهِمْ نَضْرَةَ النَّعِیْمِ ۟ۚ

83.24. நீர் அவர்களைப் பார்த்தால் அவர்களின் முகங்களில் இன்பத்தின் அடையாளத்தையும் பொலிவையும் கண்டுகொள்வீர். info
التفاسير:

external-link copy
25 : 83

یُسْقَوْنَ مِنْ رَّحِیْقٍ مَّخْتُوْمٍ ۟ۙ

83.25. அவர்களின் பணியாளர்கள் அவர்களுக்கு முத்திரையிடப்பட்ட பாத்திரங்களிலிருந்து மதுவை புகட்டுவார்கள். info
التفاسير:

external-link copy
26 : 83

خِتٰمُهٗ مِسْكٌ ؕ— وَفِیْ ذٰلِكَ فَلْیَتَنَافَسِ الْمُتَنٰفِسُوْنَ ۟ؕ

83.26. அதிலிருந்து கஸ்தூரியின் மணம் இறுதிவரை பொங்கிவரும். கண்ணியமான இந்த கூலியைப் பெறுவதற்காகவே போட்டியிடுபவர்கள் அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்களைச் செய்வதன் மூலமாகவும் அவனை கோபமூட்டும் செயல்களை விட்டுவிடுவதன் மூலமாகவும் போட்டியிட வேண்டும். info
التفاسير:

external-link copy
27 : 83

وَمِزَاجُهٗ مِنْ تَسْنِیْمٍ ۟ۙ

83.27. முத்திரையிடப்பட்ட இந்த பானம் தஸ்னீம் என்னும் ஊற்றோடு கலந்திருக்கும். info
التفاسير:

external-link copy
28 : 83

عَیْنًا یَّشْرَبُ بِهَا الْمُقَرَّبُوْنَ ۟ؕ

83.28. அது உயர்ந்த சுவனத்தில் ஓடக்கூடிய ஒரு ஊற்றாகும். அதிலிருந்து அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் எவ்வித கலப்படமுமின்றி தூய்மையாக பருகுவார்கள். ஏனைய நம்பிக்கையாளர்கள் அதனை மற்றவற்றோடு கலந்து பருகுவார்கள். info
التفاسير:

external-link copy
29 : 83

اِنَّ الَّذِیْنَ اَجْرَمُوْا كَانُوْا مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا یَضْحَكُوْنَ ۟ؗۖ

83.29. நிச்சயமாக தமது நிராகரிப்பினால் குற்றம் புரிந்தவர்கள் நம்பிக்கையாளர்களைப் பார்த்து பரிகாசமாக சிரித்துக் கொண்டிருந்தார்கள். info
التفاسير:

external-link copy
30 : 83

وَاِذَا مَرُّوْا بِهِمْ یَتَغَامَزُوْنَ ۟ؗۖ

83.30. அவர்கள் நம்பிக்கையாளர்களை கடந்துசென்றால் அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து பரிகாசமாக கண்ணசைப்பார்கள். info
التفاسير:

external-link copy
31 : 83

وَاِذَا انْقَلَبُوْۤا اِلٰۤی اَهْلِهِمُ انْقَلَبُوْا فَكِهِیْنَ ۟ؗۖ

83.31. அவர்கள் தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்றால் தமது நிராகரிப்பு மற்றும் நம்பிக்கையாளர்களைப் பரிகாசம் செய்வதை நினைத்து மகிழ்ச்சியடைந்தவர்களாகத் திரும்புவார்கள். info
التفاسير:

external-link copy
32 : 83

وَاِذَا رَاَوْهُمْ قَالُوْۤا اِنَّ هٰۤؤُلَآءِ لَضَآلُّوْنَ ۟ۙ

83.32. அவர்கள் முஸ்லிம்களைக் கண்டபோது கூறினார்கள்: “நிச்சயமாக இவர்கள் தங்களின் முன்னோர்களின் மார்க்கத்தை விட்டுவிட்டதனால் சத்தியப் பாதையைவிட்டும் தவறிவிட்டார்கள்.” info
التفاسير:

external-link copy
33 : 83

وَمَاۤ اُرْسِلُوْا عَلَیْهِمْ حٰفِظِیْنَ ۟ؕ

83.33. அவர்கள் இவ்வாறு கூறுவதற்கு அவர்களை ஒன்றும் அவர்களின் செயல்களைக் கண்காணிப்பவர்களாக அல்லாஹ் ஆக்கவில்லை. info
التفاسير:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• خطر الذنوب على القلوب.
1. பாவங்கள் உள்ளங்களில் ஏற்படுத்தும் பாதிப்பின் விபரீதம். info

• حرمان الكفار من رؤية ربهم يوم القيامة.
2. மறுமை நாளில் நிராகரிப்பாளர்கள் தங்கள் இறைவனைக் காண்பதை விட்டும் தடுக்கப்படுவார்கள். info

• السخرية من أهل الدين صفة من صفات الكفار.
3. மார்க்கப் பற்றுள்ளவர்களைப் பரிகாசம் செய்வது நிராகரிப்பாளர்களின் பண்புகளில் ஒன்றாகும். info