ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន

அல்இன்பிதார்

គោល​បំណងនៃជំពូក:
تحذير الإنسان من الاغترار ونسيان يوم القيامة.
மதிமயங்கி மறுமையை மறந்துவிடுவதை விட்டும் மனிதனை எச்சரித்தல் info

external-link copy
1 : 82

اِذَا السَّمَآءُ انْفَطَرَتْ ۟ۙ

82.1. வானவர்கள் இறங்குவதால் வானம் பிளந்துவிடும்போது. info
التفاسير:

external-link copy
2 : 82

وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ ۟ۙ

82.2. நட்சத்திரங்கள் உதிர்ந்து சிதறும்போது. info
التفاسير:

external-link copy
3 : 82

وَاِذَا الْبِحَارُ فُجِّرَتْ ۟ۙ

82.3. கடல்களில் சில சிலவற்றின் மீது திறந்துவிடப்பட்டு ஒன்றோடொன்று கலந்துவிடும் போது. info
التفاسير:

external-link copy
4 : 82

وَاِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْ ۟ۙ

82.4. இறந்தவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்காக அடக்கஸ்தலங்களின் மண் புரட்டப்படும்போது. info
التفاسير:

external-link copy
5 : 82

عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَاَخَّرَتْ ۟ؕ

82.5. அச்சமயத்தில் ஒவ்வொருவரும் தாம் செய்த செயல்களையும் செய்யாமல் விட்டுவிட்டவற்றையும் அறிந்துகொள்வார்கள். info
التفاسير:

external-link copy
6 : 82

یٰۤاَیُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِیْمِ ۟ۙ

82.6. இறைவனை நிராகரித்த மனிதனே! உன் இறைவன் தன் கிருபையினால் உடனுக்குடன் உன்னைத் தண்டிக்காமல் அவகாசம் அளித்த போது அவனது கட்டளைக்கு மாறாகச் செயல்பட எது உன்னைத் தூண்டியது? info
التفاسير:

external-link copy
7 : 82

الَّذِیْ خَلَقَكَ فَسَوّٰىكَ فَعَدَلَكَ ۟ۙ

82.7. அவன்தான் ஒன்றுமில்லாமல் இருந்த உன்னைப் படைத்தான். நேர்த்தியான உறுப்புகளை அளித்து உன்னைச் சீராக்கினான். info
التفاسير:

external-link copy
8 : 82

فِیْۤ اَیِّ صُوْرَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ ۟ؕ

82.8. அவன் உன்னைப் படைக்க நாடிய வடிவத்தில் படைத்தான். அவன் உன்னைக் கழுதையின் வடிவத்திலோ, குரங்கின் வடிவத்திலோ, நாயின் வடிவத்திலோ, இன்னபிற விலங்குகளின் வடிவத்திலோ படைக்காமல் உன் மீது அருள்புரிந்தான். info
التفاسير:

external-link copy
9 : 82

كَلَّا بَلْ تُكَذِّبُوْنَ بِالدِّیْنِ ۟ۙ

82.9. -ஏமாளிகளே!- விடயம் நீங்கள் எண்ணுவது போலல்ல. மாறாக நீங்கள் கூலி வழங்கப்படும் நாளை பொய்ப்பித்து, அதற்காக செயல்படுவதில்லை. info
التفاسير:

external-link copy
10 : 82

وَاِنَّ عَلَیْكُمْ لَحٰفِظِیْنَ ۟ۙ

82.10. நிச்சயமாக உங்களின் செயல்களைக் கண்காணிக்கும் வானவர்கள் உங்களின் மீது இருக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
11 : 82

كِرَامًا كٰتِبِیْنَ ۟ۙ

82.11. அவர்கள் அல்லாஹ்விடத்தில் கண்ணியம் வாய்ந்தவர்கள்; உங்களின் செயல்களை பதிவுசெய்யும் பதிவாளர்கள். info
التفاسير:

external-link copy
12 : 82

یَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ ۟

82.12. நீங்கள் செய்யும் செயல்களை அவர்கள் அறிவார்கள். அவற்றைப் பதிவுசெய்கிறார்கள். info
التفاسير:

external-link copy
13 : 82

اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍ ۟ۙ

82.13. நிச்சயமாக அதிகமாக வணக்க வழிபாடுகள், நற்செயல் புரிபவர்கள் மறுமை நாளில் நிலையான அருட்கொடையில் இருப்பார்கள். info
التفاسير:

external-link copy
14 : 82

وَاِنَّ الْفُجَّارَ لَفِیْ جَحِیْمٍ ۟ۙ

82.14. நிச்சயமாக பாவிகள் அவர்கள் மீது கொழுந்து விட்டெரியும் நரகத்தில் இருப்பார்கள். info
التفاسير:

external-link copy
15 : 82

یَّصْلَوْنَهَا یَوْمَ الدِّیْنِ ۟

82.15. கூலி வழங்கப்படும் நாளில் அவர்கள் அதில் நுழைவார்கள். அதன் வெப்பத்தை அனுபவிப்பார்கள். info
التفاسير:

external-link copy
16 : 82

وَمَا هُمْ عَنْهَا بِغَآىِٕبِیْنَ ۟ؕ

82.16. அவர்கள் ஒருபோதும் அதனை விட்டு வெளியேற முடியாது. மாறாக அவர்கள் அதில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். info
التفاسير:

external-link copy
17 : 82

وَمَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِ ۟ۙ

82.17. -தூதரே!- தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? info
التفاسير:

external-link copy
18 : 82

ثُمَّ مَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِ ۟ؕ

82.18. பின்னரும் தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? info
التفاسير:

external-link copy
19 : 82

یَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَیْـًٔا ؕ— وَالْاَمْرُ یَوْمَىِٕذٍ لِّلّٰهِ ۟۠

82.19. அந்நாளில் ஒருவர் மற்றவருக்குப் பயனளிக்க முடியாது. அந்நாளில் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ் ஒருவனிடமே இருக்கும். வேறு யாரிடமுமல்ல. அவன் தான் நாடியவாறு செயல்படுவான். info
التفاسير:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• التحذير من الغرور المانع من اتباع الحق.
1. சத்தியத்தைப் பின்பற்றுவதற்குத் தடையாக இருக்கும் ஏமாற்றத்தைக் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. info

• الجشع من الأخلاق الذميمة في التجار ولا يسلم منه إلا من يخاف الله.
2. பேராசை வியாபாரிகளிடம் காணப்படும் மோசமான பண்புகளில் ஒன்றாகும். அல்லாஹ்வை அஞ்சுபவரைத் தவிர வேறு யாரும் அதிலிருந்து தப்பமுடியாது. info

• تذكر هول القيامة من أعظم الروادع عن المعصية.
3. மறுமையின் பயங்கரத்தைச் சிந்திப்பது பாவம் செய்வதற்கான மிகப் பெரும் தடையாகும். info