ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន

external-link copy
28 : 47

ذٰلِكَ بِاَنَّهُمُ اتَّبَعُوْا مَاۤ اَسْخَطَ اللّٰهَ وَكَرِهُوْا رِضْوَانَهٗ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ ۟۠

47.28. அவர்கள் அனுபவிக்கும் இந்த கடுமையான வேதனைக்குக் காரணம், அவர்கள், நிராகரிப்பு, நயவஞ்சகம், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்த்தல் ஆகிய அல்லாஹ்வுக்குக் கோபமூட்டக்கூடிய ஒவ்வொன்றையும் பின்பற்றி, இறைவனின்பால் நெருக்கிவைக்கும், அவனது திருப்தியைப் பெற்றுத்தரும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளுதல், அவனுடைய தூதரைப் பின்பற்றுதல் ஆகியவற்றை வெறுத்தார்கள் என்பதுதான். ஆகவே அவன் அவர்களின் செயல்களை வீணாக்கிவிட்டான். info
التفاسير:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• التكليف بالجهاد في سبيل الله يميّز المنافقين من صفّ المؤمنين.
1. அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை விதியாக்குவது நயவஞ்சகர்களை நம்பிக்கையாளர்களின் அணியிலிருந்து வேறுபடுத்திவிடுகிறது. info

• أهمية تدبر كتاب الله، وخطر الإعراض عنه.
2. அல்லாஹ்வின் வேதத்தை ஆய்வு செய்வதன் முக்கியத்துவமும், அதனைப் புறக்கணிப்பதன் விபரீதமும். info

• الإفساد في الأرض وقطع الأرحام من أسباب قلة التوفيق والبعد عن رحمة الله.
3. பூமியில் அட்டூழியம் புரிவது, உறவுகளை முறித்துக்கொள்வது அல்லாஹ்வின் உதவி குறைவதற்கும் அவனது அருளை விட்டும் தூரமாவதற்குமுரிய காரணங்களாகும். info