Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil

external-link copy
13 : 40

هُوَ الَّذِیْ یُرِیْكُمْ اٰیٰتِهٖ وَیُنَزِّلُ لَكُمْ مِّنَ السَّمَآءِ رِزْقًا ؕ— وَمَا یَتَذَكَّرُ اِلَّا مَنْ یُّنِیْبُ ۟

40.13. அல்லாஹ்வே உங்களுக்கு பிரபஞ்சத்திலும் உங்களிலும் தன் வல்லமையையும் தான் ஒருவனே என்பதையும் அறிவிக்கக்கூடிய தன் சான்றுகளைக் காட்டுகிறான். உங்களுக்கு வாழ்வாதாரமாக அமையும் தாவரங்கள், பயிர்கள் மற்றும் இன்னபிறவற்றுக்குக் காரணமான மழை நீரை அவனே வானத்திலிருந்து இறக்குகின்றான். அல்லாஹ்வின் சான்றுகளைக்கொண்டு தூய மனதுடன் அவன் பக்கம் திரும்புபவர்தான் அறிவுரை பெறுவார். info
التفاسير:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• مَحَلُّ قبول التوبة الحياة الدنيا.
1. உலக வாழ்வுதான் பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் இடமாகும். info

• نفع الموعظة خاص بالمنيبين إلى ربهم.
2. தங்கள் இறைவனின் பக்கம் திரும்புபவர்களுக்கே அறிவுரை பயனளிக்கும். info

• استقامة المؤمن لا تؤثر فيها مواقف الكفار الرافضة لدينه.
3. நிராகரிப்பாளர்களின் இஸ்லாத்தை மறுக்கும் நிலைப்பாடுகள் நம்பிக்கையாளனின் உறுதியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. info

• خضوع الجبابرة والظلمة من الملوك لله يوم القيامة.
4. அநியாயக்கார, அடக்கியாளும் அரசர்கள் அனைவரும் மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு அடிபணிந்துவிடுவார்கள். info