Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil

external-link copy
55 : 20

مِنْهَا خَلَقْنٰكُمْ وَفِیْهَا نُعِیْدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً اُخْرٰی ۟

20.55. பூமியின் மண்ணிலிருந்தே உங்களின் தந்தை ஆதமைப் படைத்தோம். நீங்கள் இறந்த பிறகு அதில்தான் அடக்கம் செய்யப்படுவீர்கள். மறுமை நாளில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும்போது அதிலிருந்தே மீண்டும் உங்களை வெளிப்படுத்துவோம். info
التفاسير:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• إخراج أصناف من النبات المختلفة الأنواع والألوان من الأرض دليل واضح على قدرة الله تعالى ووجود الصانع.
1. பல்வேறு வகையான, பல்வேறு நிறமுடைய தாவரங்களை பூமியிலிருந்து வெளியாக்குவது அல்லாஹ்வின் வல்லமைக்கும் ஆக்குபவன் உள்ளான் என்பதற்கும் தெளிவான ஆதாரமாகும். info

• ذكرت الآيات دليلين عقليين واضحين على الإعادة: إخراج النبات من الأرض بعد موتها، وإخراج المكلفين منها وإيجادهم.
2. மீண்டும் எழுப்புவது சாத்தியமே என்பதற்கு பகுத்தறிவு ரீதியான தெளிவான இரு ஆதாரங்களை இவ்வசனங்கள் குறிப்பிடுள்ளன. ஒன்று பூமி வறண்ட பின் அதிலிருந்து தாவரத்தை வெளிப்படுத்துதல். இரண்டு, மனிதர்களை அதிலிருந்து படைத்தல். info

• كفر فرعون كفر عناد؛ لأنه رأى الآيات عيانًا لا خبرًا، واقتنع بها في أعماق نفسه.
3. பிர்அவ்னின் நிராகரிப்பு பிடிவாதத்தினால் ஏற்பட்டதாகும். ஏனெனில் நிச்சயமாக அவன் அத்தாட்சிகளை நேரடியாகக் கண்டான். மாறாக கேள்விப்பட்டல்ல. தனது மனதின் ஆழத்தில் அவற்றை அவன் ஏற்றுக்கொண்டிருந்தான். info

• اختار موسى يوم العيد؛ لتعلو كلمة الله، ويظهر دينه، ويكبت الكفر، أمام الناس قاطبة في المجمع العام ليَشِيع الخبر.
4. அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்கி, அவனது மார்க்கம் வென்று, நிராகரிப்பு தோற்க வேண்டும், பொதுவான சபையில் அனைத்து மனிதர்களுக்கு முன்னிலையிலும் தகவல் பரவ வேண்டும் என்பதற்காக பெருநாள் தினத்தை மூஸா (அலை) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். info