Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil

external-link copy
126 : 2

وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاَخِرِ ؕ— قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِیْلًا ثُمَّ اَضْطَرُّهٗۤ اِلٰی عَذَابِ النَّارِ ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟

2.126. தூதரே! இப்ராஹீம் தம் இறைவனிடம் பிரார்த்திக்கும்போது கூறியதை நினைவுகூருவீராக: என் இறைவனே, மக்காவை அமைதியான நகரமாக ஆக்குவாயாக. அங்கு யாருக்கும் தீங்கிழைக்கப்படக்கூடாது. அங்கு வசிப்பவர்களுக்கு பலவகையான பழங்களிலிருந்து உணவு வழங்குவாயாக. உன்மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு மாத்திரம் உணவுகளை அளிப்பாயாக. அதற்கு அல்லாஹ் கூறினான்,அவர்களில் நிராகரிப்பவர்களுக்கும் உலகில் சிறிது அனுபவிக்கச்செய்வேன். பின்னர் மறுமைநாளில் அவர்களை நரக வேதனையின் பக்கம் தள்ளுவேன். மறுமைநாளில் அவர்கள் திரும்பக்கூடிய இடம் மிகவும் கெட்டதாகும். info
التفاسير:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• أن المسلمين مهما فعلوا من خير لليهود والنصارى؛ فلن يرضوا حتى يُخرجوهم من دينهم، ويتابعوهم على ضلالهم.
1. முஸ்லிம்கள், யூதர்களுக்கும் கிருஸ்தவர்களுக்கும் எவ்வளவுதான் நன்மைகள் புரிந்தாலும் தங்களின் மார்க்கத்தை விட்டு அவர்கள் வெளியேறி யூதர்களின் மற்றும் கிருஸ்தவர்களின் வழியைப் பின்பற்றாதவரை அவர்களைக் குறித்து யூதர்களும் கிருஸ்தவர்களும் திருப்தியடைய மாட்டார்கள். info

• الإمامة في الدين لا تُنَال إلا بصحة اليقين والصبر على القيام بأمر الله تعالى.
2. சரியான நம்பிக்கை மற்றும் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் பொறுமையாக இருத்தல் ஆகியவற்றைக் கொண்டுதான் மார்க்கத் தலைமை பெறப்படுகிறது. info

• بركة دعوة إبراهيم عليه السلام للبلد الحرام، حيث جعله الله مكانًا آمنًا للناس، وتفضّل على أهله بأنواع الأرزاق.
3. புனித பூமி மக்காவுக்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் புரிந்த பிரார்த்தனை அருள்நிறைந்ததாகும். அதன் விளைவாக அல்லாஹ் மக்களுக்கு அதனை பாதுகாப்புமிக்கதாக ஆக்கி அங்கு வசிப்போருக்கு பலவித உணவுகளையும் வழங்கியுள்ளான். info