ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم

அல்அலக்

از اهداف این سوره:
الإنسان بين هدايته بالوحي وضلاله بالاستكبار والجهل.
மனிதன் வஹியின் மூலம் நேர்வழி பெறுவதற்கு மத்தியிலும், பெருமை அறியாமை ஆகியவற்றினால் வழிகேட்டுக்கு மத்தியிலும் உள்ளான். info

external-link copy
1 : 96

اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِیْ خَلَقَ ۟ۚ

96.1. -தூதரே!- படைப்புகள் அனைத்தையும் படைத்த உம் இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்து உம் இறைவன் உமக்கு வஹியாக அறிவிப்பதை படிப்பீராக. info
التفاسير:

external-link copy
2 : 96

خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ ۟ۚ

96.2. அவன் மனிதனை விந்திற்குப் பிறகு ஏற்படக்கூடிய இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். info
التفاسير:

external-link copy
3 : 96

اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُ ۟ۙ

96.3. -தூதரே!- அல்லாஹ் உமக்கு வஹியாக அறிவிப்பதைப் படிப்பீராக. உம் இறைவன் மிகப் பெரும் கொடையாளன். அவனது கொடையை எந்தக் கொடைவள்ளலாலும் நெருங்க முடியாது. ஏனெனில் அவன் பெரும் கொடையாளனாக, நலவு புரிபவனாக இருக்கின்றான். info
التفاسير:

external-link copy
4 : 96

الَّذِیْ عَلَّمَ بِالْقَلَمِ ۟ۙ

96.4. அவன் மனிதனுக்கு எழுதுகோலைக் கொண்டு எழுதக் கற்றுக் கொடுத்தான். info
التفاسير:

external-link copy
5 : 96

عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ یَعْلَمْ ۟ؕ

96.5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். info
التفاسير:

external-link copy
6 : 96

كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَیَطْغٰۤی ۟ۙ

96.6. உண்மையிலேயே அபூஜஹ்லைப் போன்ற பாவியான மனிதன் நிச்சயமாக அல்லாஹ்வின் வரம்புகளை மீறுதில் எல்லை கடந்துவிட்டான். info
التفاسير:

external-link copy
7 : 96

اَنْ رَّاٰهُ اسْتَغْنٰی ۟ؕ

96.7. தன்னிடமுள்ள பதவியையும் செல்வங்களையும் கொண்டு அவன் தன்னைத் தேவையற்றவன் என்று கருதியதால். info
التفاسير:

external-link copy
8 : 96

اِنَّ اِلٰی رَبِّكَ الرُّجْعٰی ۟ؕ

96.8. -மனிதனே!- நிச்சயமாக மறுமை நாளில் உன் இறைவனின் பக்கமே நீ திரும்ப வேண்டும். அவன் ஒவ்வொருவருக்கும் தகுந்த கூலியை வழங்குவான். info
التفاسير:

external-link copy
9 : 96

اَرَءَیْتَ الَّذِیْ یَنْهٰی ۟ۙ

96.9,10. (எமது அடியார் முஹம்மத் (ஸல்) அவர்கள் கஃபாவில் தொழும் போது) தடுக்கும் அபூஜஹ்லின் செயலை விட ஆச்சரியமானதை நீர் கண்டுள்ளீரா? info
التفاسير:

external-link copy
10 : 96

عَبْدًا اِذَا صَلّٰی ۟ؕ

எமது அடியார் முஹம்மத் (ஸல்) அவர்கள் கஃபாவில் தொழும் போது. info
التفاسير:

external-link copy
11 : 96

اَرَءَیْتَ اِنْ كَانَ عَلَی الْهُدٰۤی ۟ۙ

96.11. நீர் பார்த்தீரா? இவ்வாறு தடுக்கப்பட்டவர் தம் இறைவனிடமிருந்து வந்துள்ள நேர்வழியில் இருந்தாலுமா? info
التفاسير:

external-link copy
12 : 96

اَوْ اَمَرَ بِالتَّقْوٰی ۟ؕ

96.12. அல்லது அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள் என்று மக்களுக்கு ஏவக்கூடியவராக இருந்தாலுமா? இப்படிப்பட்டவர் தடுக்கப்படலாமா? info
التفاسير:
از فواید آیات این صفحه:
• رضا الله هو المقصد الأسمى.
அல்லாஹ் தனது நபியின் புகழை உயர்த்தியதன் மூலம் அவரை கண்ணிப்படுத்தல் info

• أهمية القراءة والكتابة في الإسلام.
1. அல்லாஹ்வின் திருப்தியே உன்னத நோக்கமாகும். info

• خطر الغنى إذا جرّ إلى الكبر والبُعد عن الحق.
2. இஸ்லாத்தில் வாசிப்பு மற்றும் எழுத்து ஆகியவற்றுக்குள்ள முக்கியத்துவம். info

• النهي عن المعروف صفة من صفات الكفر.
3. கர்வம், சத்தியத்தை விட்டும் தூரமாதல் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லும் செல்வத்தின் விபரீதம் info

• إكرام الله تعالى نبيه صلى الله عليه وسلم بأن رفع له ذكره.
4. நன்மையான செயல்களைவிட்டுத் தடுப்பது நிராகரிப்பாளர்களின் பண்புகளில் ஒன்றாகும். info

external-link copy
13 : 96

اَرَءَیْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ

96.13. நீர் பார்த்தீரா? இவ்வாறு தடுக்கக்கூடியவன் தூதர் கொண்டுவந்ததை பொய்ப்பித்து புறக்கணித்தாலுமா? அவன் அல்லாஹ்வை அஞ்சவில்லையா? info
التفاسير:

external-link copy
14 : 96

اَلَمْ یَعْلَمْ بِاَنَّ اللّٰهَ یَرٰی ۟ؕ

96.14. தொழுகையை விட்டும் அந்த அடியாரை தடுக்கக்கூடியவன் அவன் செய்யும் செயல்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை என்பதையும் அறியவில்லையா? info
التفاسير:

external-link copy
15 : 96

كَلَّا لَىِٕنْ لَّمْ یَنْتَهِ ۙ۬— لَنَسْفَعًا بِالنَّاصِیَةِ ۟ۙ

96.15. இந்த மூடன் எண்ணுவது போலல்ல விடயம். அவன் நம் அடியாரைத் துன்புறுத்துவதையும் பொய்ப்பிப்பதையும் நிறுத்திக்கொள்ளவில்லையெனில் நாம் அவனது நெற்றி முடியை கொடூரமாகப் பிடித்து இழுத்து நரகத்தில் தள்ளிடுவோம். info
التفاسير:

external-link copy
16 : 96

نَاصِیَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ۟ۚ

96.16. அந்த நெற்றி முடி உடையவன் சொல்லில் பொய் சொல்லக்கூடியவன், செயலில் தவறிழைக்கக்கூடியவன். info
التفاسير:

external-link copy
17 : 96

فَلْیَدْعُ نَادِیَهٗ ۟ۙ

96.17. அவனது நெற்றிமுடி பிடிக்கப்பட்டு அவன் நரகத்தில் தள்ளப்படும்போது தன்னை வேதனையிலிருந்து காப்பாற்றி உதவி புரிவதற்காக தன் தோழர்களையும் அவையினரையும் அவன் அழைக்கட்டும். info
التفاسير:

external-link copy
18 : 96

سَنَدْعُ الزَّبَانِیَةَ ۟ۙ

96.18. நாமும் நரகத்தின் காவலர்களான கடுமையான வானவர்களை அழைப்போம். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட மாட்டார்கள். தங்களுக்கு இடப்படும் கட்டளைகளைச் செயல்படுத்துகிறார்கள். எனவே இரு பிரிவினரில் யார் பலம்வாய்ந்தவர், சக்தி பெற்றவர் என்பதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். info
التفاسير:

external-link copy
19 : 96

كَلَّا ؕ— لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۟

96.19. இந்த அநியாயக்காரன் எண்ணுவது போலல்ல விடயம். அவன் உமக்குத் தீங்கிழைத்துவிட முடியாது. எனவே அவனுக்கு நீர் ஏவலிலும் விலக்கலிலும் கட்டுப்படாதீர். அல்லாஹ்வுக்குச் சிரம்பணிவீராக. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதன் மூலம் அவனை நெருங்குவீராக. நிச்சயமாக அவனுக்குக் கட்டுப்படுவது அவன் பக்கம் நெருக்கி வைக்கும். info
التفاسير:
از فواید آیات این صفحه:
• فضل ليلة القدر على سائر ليالي العام.
1. லைலத்துல் கத்ர் என்னும் இரவு வருடத்தின் அனைத்து இரவுகளையும்விடச் சிறந்ததாகும். info

• الإخلاص في العبادة من شروط قَبولها.
2. அல்லாஹ்வை மட்டுமே உளப்பூர்வமாக வணங்குவது அது ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாகும். info

• اتفاق الشرائع في الأصول مَدعاة لقبول الرسالة.
4. அனைத்து மார்க்கங்களும் அடிப்படைகளில் உடன்படுவது தூதுத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கு தூண்டக்கூடியதாகும். info