ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم

அல்கஹ்ப்

از اهداف این سوره:
بيان منهج التعامل مع الفتن.
சோதனைகளைக் கையாள்வதற்கான அணுகுமுறையைத் தெளிவுபடுத்தல் info

external-link copy
1 : 18

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِیْۤ اَنْزَلَ عَلٰی عَبْدِهِ الْكِتٰبَ وَلَمْ یَجْعَلْ لَّهٗ عِوَجًا ۟ؕٚ

18.1. கண்ணியம் மற்றும் பரிபூரண பண்புகளைக்கொண்டும் வெளிப்படையான, அந்தரங்கமான அருட்கொடைகளைக் கொண்டும் புகழ்தல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அவனே தன் அடியார், தன் தூதர் முஹம்மது மீது குர்ஆனை இறக்கினான். இந்தக் குர்ஆனில் அவன் எந்தக் கோணலையும் சத்தியத்தை விட்டும் சாய்வதனையும் ஏற்படுத்தவில்லை. info
التفاسير:

external-link copy
2 : 18

قَیِّمًا لِّیُنْذِرَ بَاْسًا شَدِیْدًا مِّنْ لَّدُنْهُ وَیُبَشِّرَ الْمُؤْمِنِیْنَ الَّذِیْنَ یَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا حَسَنًا ۟ۙ

18.2. மாறாக முரண்பாடுகளோ, கருத்துவேறுபாடுகளோ அற்ற முற்றிலும் நேர்த்தியான வேதமாக அதனை ஆக்கியுள்ளான். நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கடுமையான வேதனை காத்திருக்கின்றது என்று எச்சரிக்கை செய்வதற்காகவும் நற்செயல்கள் புரியும் நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக இணையற்ற அழகிய கூலி இருக்கின்றது என்று நற்செய்தி கூறுவதற்காகவும்தான் அவ்வாறு அருளியுள்ளான். info
التفاسير:

external-link copy
3 : 18

مَّاكِثِیْنَ فِیْهِ اَبَدًا ۟ۙ

18.3. அவர்கள் அந்த வெகுமதியில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள். அது அவர்களை விட்டு என்றும் முடிவுறாதது. info
التفاسير:

external-link copy
4 : 18

وَّیُنْذِرَ الَّذِیْنَ قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا ۟ۗ

18.4. அல்லாஹ் தனக்கு ஒரு மகனை ஏற்படுத்திக் கொண்டான் என்று கூறும் யூதர்களையும் கிருஸ்தவர்களையும் சில இணைவைப்பாளர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும்தான் அவ்வாறு இறக்கியுள்ளான். info
التفاسير:
از فواید آیات این صفحه:
• أنزل الله القرآن متضمنًا الحق والعدل والشريعة والحكم الأمثل .
1. சத்தியம், நீதி, ஷரீஅத், சிறந்த தீர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக குர்ஆனை அல்லாஹ் இறக்கியுள்ளான். info

• جواز البكاء في الصلاة من خوف الله تعالى.
2. அல்லாஹ்வின் பயத்தால் தொழுகையில் அழலாம். info

• الدعاء أو القراءة في الصلاة يكون بطريقة متوسطة بين الجهر والإسرار.
3. தொழுகையில் குர்ஆன் ஓதுவதும், பிரார்த்தனை செய்வதும் சப்தமாகவோ, மெதுவாகவோ அல்லாமல் நடுநிலையான முறையில் அமைய வேண்டும். info

• القرآن الكريم قد اشتمل على كل عمل صالح موصل لما تستبشر به النفوس وتفرح به الأرواح.
4. உள்ளங்களில் மகிழ்ச்சியை உண்டாக்கும், ஆன்மாக்கள் மகிழ்வுறும் எல்லா நற்செயல்களையும் சங்கையான அல்குர்ஆன் உள்ளடக்கியுள்ளது. info