ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم

அல்ஆதியாத்

از اهداف این سوره:
تحذير الإنسان من الجحود والطمع بتذكيره بالآخرة.
மனிதனுக்கு மறுமையை ஞாபகமூட்டுவதன் மூலம் நன்றி மறத்தல், பேராசை என்பவற்றை விட்டும் அவனை எச்சரித்தல் info

external-link copy
1 : 100

وَالْعٰدِیٰتِ ضَبْحًا ۟ۙ

100.1. வேகமாக மூச்சிறைத்து சத்தத்தை வெளிப்படுத்தி ஓடும் குதிரைகளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான். info
التفاسير:

external-link copy
2 : 100

فَالْمُوْرِیٰتِ قَدْحًا ۟ۙ

100.2. தன் குளம்புகளால் பாறைகளில் கடுமையாக உரசுவதால் தீப்பொறியை உண்டாக்கும் குதிரைகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான். info
التفاسير:

external-link copy
3 : 100

فَالْمُغِیْرٰتِ صُبْحًا ۟ۙ

100.3. அதிகாலை நேரத்தில் எதிரிகளின்மீது தாக்குதல் தொடுக்கும் குதிரைகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான். info
التفاسير:

external-link copy
4 : 100

فَاَثَرْنَ بِهٖ نَقْعًا ۟ۙ

100.4. அவை தாம் ஓடும்போது புழுதியைக் கிளப்புகின்றன. info
التفاسير:

external-link copy
5 : 100

فَوَسَطْنَ بِهٖ جَمْعًا ۟ۙ

100.5. வீரர்களுடன் அவை எதிரிகளிடையே கூட்டமாக நுழைந்து விடுகின்றன. info
التفاسير:
از فواید آیات این صفحه:
• خشية الله سبب في رضاه عن عبده.
3. நிராகரிப்பாளர்கள் படைப்புகளில் தீயவர்கள். நம்பிக்கையாளர்கள் படைப்புகளில் சிறந்தவர்கள். info

• شهادة الأرض على أعمال بني آدم.
1. இறையச்சம் அல்லாஹ் தனது அடியானைப் பொருந்திக்கொள்வதற்குக் காரணமாகும். info

• الكفار شرّ الخليقة، والمؤمنون خيرها.
2. பூமி ஆதமுடைய மக்களின் செயல்களுக்கு சாட்சி கூறுதல். info

external-link copy
6 : 100

اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَكَنُوْدٌ ۟ۚ

100.6. நிச்சயமாக மனிதன் தன் இறைவன் தன்னிடமிருந்து விரும்பும் நன்மையை தடுத்துக்கொள்ளக் கூடியவனாக இருக்கின்றான். info
التفاسير:

external-link copy
7 : 100

وَاِنَّهٗ عَلٰی ذٰلِكَ لَشَهِیْدٌ ۟ۚ

100.7. அவன் நன்மையைத் தடுப்பதற்கு அவனே சாட்சியாகவும் இருக்கின்றான். அது தெளிவாக இருப்பதால் அவனால் அதனை மறுக்க முடியாது. info
التفاسير:

external-link copy
8 : 100

وَاِنَّهٗ لِحُبِّ الْخَیْرِ لَشَدِیْدٌ ۟ؕ

100.8. நிச்சயமாக அவன் செல்வத்தின் மீதுள்ள மோகத்தினால் அதில் கஞ்சத்தனம் செய்கிறான். info
التفاسير:

external-link copy
9 : 100

اَفَلَا یَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِی الْقُبُوْرِ ۟ۙ

100.9. இவ்வுலக வாழ்க்கையில் மயங்கிய இந்த மனிதன், அல்லாஹ் மண்ணறைகளில் உள்ளவர்களை உயிர்கொடுத்து எழுப்பி, பூமியிலிருந்து அவர்களை விசாரணை செய்வதற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் வெளியேற்றும் போது விஷயம் அவன் எண்ணியது போல் இருக்காது என்பதை அறியவில்லையா? info
التفاسير:

external-link copy
10 : 100

وَحُصِّلَ مَا فِی الصُّدُوْرِ ۟ۙ

100.10. உள்ளங்களிலுள்ள எண்ணங்கள், கொள்கைகள் மற்றும் இன்னபிற விஷயங்களெல்லாம் வெளிப்படுத்தப்படும் தெளிவாக்கப்படும். info
التفاسير:

external-link copy
11 : 100

اِنَّ رَبَّهُمْ بِهِمْ یَوْمَىِٕذٍ لَّخَبِیْرٌ ۟۠

100.11. நிச்சயமாக அந்த நாளில் அவர்களின் இறைவன் அவர்களைக் குறித்து நன்கறிந்தவன். தன் அடியார்களின் விடயம் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அதற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான். info
التفاسير:
از فواید آیات این صفحه:
• خطر التفاخر والتباهي بالأموال والأولاد.
1. செல்வங்கள் மற்றும் குழந்தைகளைக் கொண்டு பெருமையடிப்பதால் ஏற்படும் விபரீதம். info

• القبر مكان زيارة سرعان ما ينتقل منه الناس إلى الدار الآخرة.
2. மண்ணறை சந்தித்துக்கொள்ளும் ஓர் இடமாகும். மனிதர்கள் விரைவாக அதிலிருந்து மறுமை வீட்டுக்கு சென்றுவிடுவார்கள். info

• يوم القيامة يُسْأل الناس عن النعيم الذي أنعم به الله عليهم في الدنيا.
3. மறுமை நாளில் மக்கள் உலகில் அல்லாஹ்வால் தங்களுக்கு அளிக்கப்பட்ட அருட்கொடைகளைக் குறித்து விசாரிக்கப்படுவார்கள். info

• الإنسان مجبول على حب المال.
4. மனிதன் பணத்தை நேசிக்கும் இயல்புள்ளவன். info