আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - আল-মুখতাচাৰ ফী তাফছীৰিল কোৰআনিল কাৰীমৰ তামিল অনুবাদ

அந்நாஸிஆத்

ছুৰাৰ উদ্দেশ্য:
التذكير بالله واليوم الآخر.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஞாபகமூட்டல் info

external-link copy
1 : 79

وَالنّٰزِعٰتِ غَرْقًا ۟ۙ

79.1. நிராகரிப்பாளர்களின் உயிர்களை கடுமையாகப், பலவந்தமாக பற்றியிழுக்கும் வானவர்களைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான். info
التفاسير:

external-link copy
2 : 79

وَّالنّٰشِطٰتِ نَشْطًا ۟ۙ

79.2. நம்பிக்கையாளர்களின் உயிர்களை இலகுவாக, மென்மையாகக் கைப்பற்றும் வானவர்களைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான். info
التفاسير:

external-link copy
3 : 79

وَّالسّٰبِحٰتِ سَبْحًا ۟ۙ

79.3. அல்லாஹ்வின் கட்டளையைக்கொண்டு வானத்திலிருந்து பூமியை நோக்கி நீந்திச் செல்லும் வானவர்களைக்கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான். info
التفاسير:

external-link copy
4 : 79

فَالسّٰبِقٰتِ سَبْقًا ۟ۙ

79.4. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதில் தம்மில் சிலரை முந்திக்கொண்டு செயற்படும் வானவர்களைக் கொண்டு அவன் சத்தியம் செய்துள்ளான். info
التفاسير:

external-link copy
5 : 79

فَالْمُدَبِّرٰتِ اَمْرًا ۟ۘ

79.5. அடியார்களின் செயல்களுக்கு பொறுப்புச்சாட்டப்பட்ட வானவர்களைப் போன்ற அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தும் வானவர்களைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான். விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் அவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டே தீருவார்கள் என்பதற்கே இவையனைத்தின் மீதும் அவன் சத்தியம் செய்துள்ளான். info
التفاسير:

external-link copy
6 : 79

یَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ ۟ۙ

79.6. முதல் முறை சூர் ஊதப்படும்போது பூமி குலுங்கிவிடும் நாளில் info
التفاسير:

external-link copy
7 : 79

تَتْبَعُهَا الرَّادِفَةُ ۟ؕ

79.7. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையும் சூர் ஊதப்படும். info
التفاسير:

external-link copy
8 : 79

قُلُوْبٌ یَّوْمَىِٕذٍ وَّاجِفَةٌ ۟ۙ

79.8. அந்த நாளில் நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளின் உள்ளங்கள் பயந்து கொண்டிருக்கும்.
info
التفاسير:

external-link copy
9 : 79

اَبْصَارُهَا خَاشِعَةٌ ۟ۘ

79.9. அவர்களின் பார்வையில் இழிவின் அடையாளம் காணப்படும். info
التفاسير:

external-link copy
10 : 79

یَقُوْلُوْنَ ءَاِنَّا لَمَرْدُوْدُوْنَ فِی الْحَافِرَةِ ۟ؕ

79.10. “நாம் இறந்தபிறகு மீண்டும் வாழ்க்கையின் பக்கம் திரும்புவோமோ? என்று கேட்பவர்களாக இருக்கிறார்கள்: info
التفاسير:

external-link copy
11 : 79

ءَاِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ۟ؕ

79.11. நாம் உக்கிய எலும்புகளாகிவிட்டாலும் அதன்பிறகு திரும்புவோமா?” info
التفاسير:

external-link copy
12 : 79

قَالُوْا تِلْكَ اِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ۟ۘ

79.12. அவர்கள் கூறுவார்கள்: “நாம் திரும்பினால் அந்த திரும்புதல் நஷ்டம்தான். அவ்வாறு திரும்புபவன் ஏமாற்றத்திற்குள்ளானவனாவான். info
التفاسير:

external-link copy
13 : 79

فَاِنَّمَا هِیَ زَجْرَةٌ وَّاحِدَةٌ ۟ۙ

79.13. மீண்டும் எழுப்பப்படுவது இலகுவானது. நிச்சயமாக சூர் ஊதுவதற்காக நியமிக்கப்பட்ட வானவரிடமிருந்து வெளிப்படும் ஒரேயொரு பெரும் சப்தம்தான். info
التفاسير:

external-link copy
14 : 79

فَاِذَا هُمْ بِالسَّاهِرَةِ ۟ؕ

79.14. உடனே பூமியின் வயிற்றில் இறந்துகிடக்கின்ற அனைவரும் அதன் மேற்பரப்பில் உயிர்பெற்றவர்களாகி விடுவார்கள். info
التفاسير:

external-link copy
15 : 79

هَلْ اَتٰىكَ حَدِیْثُ مُوْسٰی ۟ۘ

79.15. -தூதரே!- தனது இறைவனுடனும் தனது எதிரியான பிர்அவ்னுடனும் மூஸாவுக்கு நடந்த சம்பவம் உம்மிடம் வந்ததா? info
التفاسير:

external-link copy
16 : 79

اِذْ نَادٰىهُ رَبُّهٗ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًی ۟ۚ

79.16. அவரது இறைவன் அவரை துவா என்ற புனிதமான பள்ளத்தாக்கில் அழைத்தபோது info
التفاسير:
এই পৃষ্ঠাৰ আয়াতসমূহৰ পৰা সংগৃহীত কিছুমান উপকাৰী তথ্য:
• التقوى سبب دخول الجنة.
1. இறையச்சம் சுவனத்தின்பால் இட்டுச் செல்லும் காரணியாக இருக்கின்றது. info

• تذكر أهوال القيامة دافع للعمل الصالح.
2. மறுமையின் பயங்கரங்களைச் சிந்திப்பது நற்காரியம் புரிவதற்குத் தூண்டக்கூடியதாகும். info

• قبض روح الكافر بشدّة وعنف، وقبض روح المؤمن برفق ولين.
3. நிராகரிப்பாளனின் ஆத்மா பலவந்தமாகவும் கடுமையாகவும் நம்பிக்கையாளனின் ஆத்மா மிருதுவாகவும் கைப்பற்றப்படும். info

external-link copy
17 : 79

اِذْهَبْ اِلٰی فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰی ۟ؗۖ

79.17. அவருக்கு அல்லாஹ் மேலும் கூறினான்: “ஃபிர்அவ்னிடம் செல்வீராக. நிச்சயமாக அவன் அநியாயம் செய்வதிலும் கர்வம் கொள்வதிலும் வரம்புமீறி விட்டான்.” info
التفاسير:

external-link copy
18 : 79

فَقُلْ هَلْ لَّكَ اِلٰۤی اَنْ تَزَكّٰی ۟ۙ

79.18. அவனிடம் கேட்பீராக: “-ஃபிர்அவ்னே!- நீ நிராகரிப்பிலிருந்தும் பாவங்களிலிருந்தும் தூய்மையடைய விரும்புகிறாயா?” info
التفاسير:

external-link copy
19 : 79

وَاَهْدِیَكَ اِلٰی رَبِّكَ فَتَخْشٰی ۟ۚ

79.19. நான் உன்னைப் படைத்துப் பராமரிக்கும் இறைவனின்பால் உனக்கு வழிகாட்டுகிறேன். நீ அவனை அஞ்சி அவனுக்கு விருப்பமான செயல்களைச் செய்து அவனைக் கோபத்திலாழ்த்தும் காரியங்களை விட்டும் விலகியிரு.” info
التفاسير:

external-link copy
20 : 79

فَاَرٰىهُ الْاٰیَةَ الْكُبْرٰی ۟ؗۖ

79.20. மூஸா அவனுக்கு தாம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் என்பதை அறிவிக்கக்கூடிய மிகப் பெரிய சான்றினைக் காட்டினார். அது கையும் கைத்தடியுமாகும். info
التفاسير:

external-link copy
21 : 79

فَكَذَّبَ وَعَصٰی ۟ؗۖ

79.21. ஆனால் ஃபிர்அவ்ன் அந்த சான்றினை பொய்ப்பித்தான். மூஸா அவனுக்குக் கட்டளையிட்டதற்கு மாறாகவே நடந்தான். info
التفاسير:

external-link copy
22 : 79

ثُمَّ اَدْبَرَ یَسْعٰی ۟ؗۖ

பின்னர் மூஸா நபி கொண்டுவந்தவற்றை விசுவாசம்கொள்ளாமல், பாவத்திலும் சத்தியத்துக்கு மாறுசெய்வதிலும் ஈடுபட்டவனாக புறக்கணித்தான்.
info
التفاسير:

external-link copy
23 : 79

فَحَشَرَ ۫— فَنَادٰی ۟ؗۖ

மூஸாவை வெற்றி கொள்ள தனது கூட்டத்தையும் தன்னைப் பின்பற்றுவோரையும் ஒன்றுதிரட்டினான். பின்வருமாறு கூறி அழைப்புவிடுத்தான்.
info
التفاسير:

external-link copy
24 : 79

فَقَالَ اَنَا رَبُّكُمُ الْاَعْلٰی ۟ؗۖ

79.24. “நான்தான் உங்களின் உயர்வான இறைவன். எனவே என்னைத் தவிர நீங்கள் யாருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை.” info
التفاسير:

external-link copy
25 : 79

فَاَخَذَهُ اللّٰهُ نَكَالَ الْاٰخِرَةِ وَالْاُوْلٰی ۟ؕ

79.25. அல்லாஹ் அவனைப் பிடித்தான். உலகில் கடலில் மூழ்கடித்தும் மறுமையில் கொடிய வேதனையில் பிரவேசிக்கச் செய்தும் அவனைத் தண்டித்தான். info
التفاسير:

external-link copy
26 : 79

اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّمَنْ یَّخْشٰی ۟ؕ۠

79.26. நிச்சயமாக நாம் ஃபிர்அவ்னை இவ்வுலகிலும் மறுவுலகிலும் தண்டித்ததில் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவனுக்கு அறிவுரை இருக்கின்றது. அவர்தாம் அறிவுரைகளைக்கொண்டு பயனடைவார். info
التفاسير:

external-link copy
27 : 79

ءَاَنْتُمْ اَشَدُّ خَلْقًا اَمِ السَّمَآءُ ؕ— بَنٰىهَا ۟۫

79.27. -மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுப்பவர்களே!- உங்களைப் படைப்பது அல்லாஹ்வுக்குச் சிரமமானதா? அல்லது அவன் படைத்திருக்கும் வானத்தை உருவாக்குவதா? info
التفاسير:

external-link copy
28 : 79

رَفَعَ سَمْكَهَا فَسَوّٰىهَا ۟ۙ

79.28. அதன் முகட்டை உயரமாக்கி எந்தக் குறைபாடும் பிளவும் இல்லாதவாறு அதனை செவ்வையாக்கினான். info
التفاسير:

external-link copy
29 : 79

وَاَغْطَشَ لَیْلَهَا وَاَخْرَجَ ضُحٰىهَا ۪۟

79.29. அதிலுள்ள சூரியன் மறைந்தவுடன் அதன் இரவை இருளாக்கி அது உதித்தவுடன் அதன் பிரகாசத்தை வெளிப்படுத்தினான். info
التفاسير:

external-link copy
30 : 79

وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰىهَا ۟ؕ

79.30. அவன் வானத்தைப் படைத்த பிறகு பூமியை விரித்தான். அதில் பயன்தரக்கூடியவற்றை உண்டாக்கினான். info
التفاسير:

external-link copy
31 : 79

اَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعٰىهَا ۪۟

79.31. அதிலிருந்து அதன் நீரை ஓடும் ஊற்றுகளாக வெளிப்படுத்தினான். அதில் கால்நடைகள் மேயக்கூடிய தாவரங்களை முளைக்கச் செய்தான். info
التفاسير:

external-link copy
32 : 79

وَالْجِبَالَ اَرْسٰىهَا ۟ۙ

79.32. மலைகளை பூமியின்மீது உறுதியானவையாக ஆக்கினான். info
التفاسير:

external-link copy
33 : 79

مَتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْ ۟ؕ

79.33. -மனிதர்களே!- இவையனைத்தும் உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கும் பொருட்டேயாகும். இவையனைத்தையும் படைத்தவன் அவர்களை மீண்டும் புதிதாக படைப்பதற்கு இயலாதவன் அல்ல. info
التفاسير:

external-link copy
34 : 79

فَاِذَا جَآءَتِ الطَّآمَّةُ الْكُبْرٰی ۟ؗۖ

79.34. அனைத்தையும் தன் பயங்கரத்தால் மூடிக்கொள்ளும் இரண்டாவது முறை சூர் ஊதப்பட்டு, மறுமை நிலைபெற்று விடும் போது. info
التفاسير:

external-link copy
35 : 79

یَوْمَ یَتَذَكَّرُ الْاِنْسَانُ مَا سَعٰی ۟ۙ

79.35. அது ஏற்படும் நாளில் மனிதன் தான் செய்த நற்செயல்கள், தீயசெயல்கள் அனைத்தையும் நினைவுபடுத்திப் பார்ப்பான். info
التفاسير:

external-link copy
36 : 79

وَبُرِّزَتِ الْجَحِیْمُ لِمَنْ یَّرٰی ۟

79.36. நரகம் கொண்டுவரப்படும். அது பார்ப்பவர்களுக்காக காணும் வகையில் வெளிப்படுத்தப்படும். info
التفاسير:

external-link copy
37 : 79

فَاَمَّا مَنْ طَغٰی ۟ۙ

79.37. யார் வழிகேட்டில் வரம்புமீறினாரோ. info
التفاسير:

external-link copy
38 : 79

وَاٰثَرَ الْحَیٰوةَ الدُّنْیَا ۟ۙ

79.38. நிலையான மறுமை வாழ்வை விட்டுவிட்டு அழியக்கூடிய உலக வாழ்வை தேர்ந்தெடுத்துக் கொண்டாரோ. info
التفاسير:

external-link copy
39 : 79

فَاِنَّ الْجَحِیْمَ هِیَ الْمَاْوٰی ۟ؕ

79.39. நிச்சயமாக நரகமே அவர் ஒதுங்குகின்ற தங்குமிடமாகும். info
التفاسير:

external-link copy
40 : 79

وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَنَهَی النَّفْسَ عَنِ الْهَوٰی ۟ۙ

79.40. யார் தம் இறைவனின் முன் நிற்பதை அஞ்சி அவன் தடுத்த மன இச்சையிலிருந்து தம் மனதைத் தடுத்துக் கொண்டாரோ நிச்சயமாக சுவர்க்கமே அவர் ஒதுங்குகின்ற தங்குமிடமாகும். info
التفاسير:

external-link copy
41 : 79

فَاِنَّ الْجَنَّةَ هِیَ الْمَاْوٰی ۟ؕ

79.41. யார் தம் இறைவனின் முன் நிற்பதை அஞ்சி அவன் தடுத்த மன இச்சையிலிருந்து தம் மனதைத் தடுத்துக் கொண்டாரோ நிச்சயமாக சுவர்க்கமே அவர் ஒதுங்குகின்ற தங்குமிடமாகும். info
التفاسير:

external-link copy
42 : 79

یَسْـَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَیَّانَ مُرْسٰىهَا ۟ؕ

79.42. -தூதரே!- மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கும் இவர்கள் “மறுமை எப்போது நிகழும்” என்று உம்மிடம் கேட்கிறார்கள். info
التفاسير:

external-link copy
43 : 79

فِیْمَ اَنْتَ مِنْ ذِكْرٰىهَا ۟ؕ

79.43. நீர் அவர்களுக்கு அதுகுறித்து கூறுவதற்கு உமக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது. அதுகுறித்து அறிவிப்பது உம்முடைய விடயமல்ல. அதற்காக தயார்படுத்திக் கொள்வதே உமது பணியாகும். info
التفاسير:

external-link copy
44 : 79

اِلٰی رَبِّكَ مُنْتَهٰىهَا ۟ؕ

79.44. மறுமை குறித்த முழுமையான அறிவு உம் இறைவனிடம் மட்டுமே உள்ளது. info
التفاسير:

external-link copy
45 : 79

اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرُ مَنْ یَّخْشٰىهَا ۟ؕ

79.45. நீர் மறுமையை அஞ்சக்கூடியவருக்கு எச்சரிப்பவர் மட்டுமே ஆவீர். ஏனெனில் அவர்தான் உமது எச்சரிக்கையைக்கொண்டு பயனடைவார். info
التفاسير:

external-link copy
46 : 79

كَاَنَّهُمْ یَوْمَ یَرَوْنَهَا لَمْ یَلْبَثُوْۤا اِلَّا عَشِیَّةً اَوْ ضُحٰىهَا ۟۠

79.46. அவர்கள் மறுமை நாளைக் காணும் நாளில் அவர்கள் தங்களின் உலக வாழ்க்கையில் ஒருநாளின் மாலைப்பொழுதோ அல்லது காலைப்பொழுதோதான் அங்கு தங்கியிருந்ததாகத் தோன்றும். info
التفاسير:
এই পৃষ্ঠাৰ আয়াতসমূহৰ পৰা সংগৃহীত কিছুমান উপকাৰী তথ্য:
• وجوب الرفق عند خطاب المدعوّ.
1. அழைப்பு விடுக்கப்படும் மக்களுடன் மென்மையாக நடந்துகொள்வது கட்டாயமாகும். info

• الخوف من الله وكفّ النفس عن الهوى من أسباب دخول الجنة.
2. இறையச்சம், மன இச்சையைவிட்டும் மனதை காத்துக்கொள்ளுதல் சுவனத்தின்பால் இட்டுச் செல்லும் காரணிகளாக இருக்கின்றன. info

• علم الساعة من الغيب الذي لا يعلمه إلا الله.
3. மறுமையைப் பற்றிய அறிவு அல்லாஹ் மாத்திரமே அறிந்த மறைவான செய்தியாகும். info

• بيان الله لتفاصيل خلق السماء والأرض.
4. வானம், பூமியைப் படைத்தது பற்றிய விரிவான அல்லாஹ்வின் விளக்கம். info