আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - আল-মুখতাচাৰ ফী তাফছীৰিল কোৰআনিল কাৰীমৰ তামিল অনুবাদ

external-link copy
66 : 40

قُلْ اِنِّیْ نُهِیْتُ اَنْ اَعْبُدَ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَمَّا جَآءَنِیَ الْبَیِّنٰتُ مِنْ رَّبِّیْ ؗ— وَاُمِرْتُ اَنْ اُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟

40.66. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கக்கூடிய பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற இந்த சிலைகளை நான் வணங்குவதைவிட்டும் அல்லாஹ் என்னைத் தடுத்துள்ளான். அவ்வாறு வணங்குவது தவறானது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் என்னிடம் வந்துள்ளன. நான் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். அவன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. info
التفاسير:
এই পৃষ্ঠাৰ আয়াতসমূহৰ পৰা সংগৃহীত কিছুমান উপকাৰী তথ্য:
• دخول الدعاء في مفهوم العبادة التي لا تصرف إلا إلى الله؛ لأن الدعاء هو عين العبادة.
1. பிரார்த்தனை செய்வதும் வணக்க வழிபாட்டில் உள்ளவையாகும். பிரார்த்தனை அல்லாஹ்விடம் மட்டுமே செய்யப்பட வேண்டும். ஏனெனில் பிரார்த்தனை செய்வது வணக்கமாகும். info

• نعم الله تقتضي من العباد الشكر.
2. அல்லாஹ்வின் அருட்கொடைகள் அவனுக்கு நன்றிசெலுத்துவதை அடியானுக்கு வலியுறுத்துகின்றன. info

• ثبوت صفة الحياة لله.
3. வாழ்வு என்னும் பண்பு அல்லாஹ்வுக்கு உள்ளது என்பது உறுதியாகிறது. info

• أهمية الإخلاص في العمل.
4. உளத்தூய்மையுடன் செயல்படுவதன் முக்கியத்துவம் தெளிவாகிறது. info