Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

external-link copy
30 : 13

كَذٰلِكَ اَرْسَلْنٰكَ فِیْۤ اُمَّةٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهَاۤ اُمَمٌ لِّتَتْلُوَاۡ عَلَیْهِمُ الَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَهُمْ یَكْفُرُوْنَ بِالرَّحْمٰنِ ؕ— قُلْ هُوَ رَبِّیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— عَلَیْهِ تَوَكَّلْتُ وَاِلَیْهِ مَتَابِ ۟

13.30. -தூதரே!- நாம் முந்தைய சமூகங்களின் பக்கம் தூதர்களை அனுப்பியது போன்றே உம் சமூகத்தின் பக்கமும், நாம் உமக்கு வஹி மூலம் அறிவிக்கும் குர்ஆனை அவர்களுக்கு எடுத்துரைப்பதற்காக, உம்மை தூதராக அனுப்பினோம், அது உமது நம்பகத்தன்மையை எடுத்துரைக்கப் போதுமானது. ஆயினும் உமது சமூகத்தினர் இந்த அற்புதத்தை அறிந்து கொண்டே நிராகரிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அளவிலாக் கருணையாளனுக்கு இணைகளை ஏற்படுத்தி அவனை நிராகரிக்கிறார்கள். தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் யாருக்கு ஏனைய தெய்வங்களை இணைவைத்துக்கொண்டுள்ளீர்களோ அந்தக் கருணையாளன்தான் என் இறைவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. என்னுடைய எல்லா விவகாரங்களிலும் அவனையே சார்ந்துள்ளேன். அவன் பக்கமே நான் திரும்புகின்றேன். info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• أن الأصل في كل كتاب منزل أنه جاء للهداية، وليس لاستنزال الآيات، فذاك أمر لله تعالى يقدره متى شاء وكيف شاء.
1. வேதங்கள் அனைத்தும் இறக்கப்பட்ட அடிப்படை நோக்கம், நிச்சயமாக அவை வழிகாட்டுவதேயாகும். சான்றுகளை இறக்குமாறு கேட்பதற்கு அல்ல. சான்றுகளை இறக்குவது அல்லாஹ்விடமே உள்ளது. அவன் நாடிய போது நாடியவாறு நிர்ணயம் செய்வான். info

• تسلية الله تعالى للنبي صلى الله عليه وسلم، وإحاطته علمًا أن ما يسلكه معه المشركون من طرق التكذيب، واجهه أنبياء سابقون.
2. , இணைவைப்பாளர்கள் தன் துாதருடன் கடைபிடிக்கும், பொய்பிக்கும் வழிமுறைகள் முன் சென்ற இறைத் தூதர்களும் எதிர்நோக்கியவையே என தன் தூதருக்கு ஆறுதல் கூறி அறிவித்துக் கொடுக்கின்றான். info

• يصل الشيطان في إضلال بعض العباد إلى أن يزين لهم ما يعملونه من المعاصي والإفساد.
3. ஷைத்தான் சில அடியார்களை வழி கெடுப்பதில் அவர்கள் செய்யும் பாவங்களையும் குழப்பத்தையும் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டும் அளவுக்கு சென்று விடுகிறான். info